Vivo நிறுவனம் தனது 5G ஸ்மார்ட தொலைபேசியின் வெளியீட்டு விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்தவகையில் தனது முதல் 5G ஸ்மார்ட் தொலைபேசியை 2019 சர்வதேச Mobile Congress விழாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2019 சர்வதேச Mobile Congress விழா ஷாங்காய் நகரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இம் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகி இவ்விழா இம் மாதம் 29 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
இவ்விழாவில் Vivo தனது முதல் 5G ஸ்மார்ட் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. அதேநேரம் Vivo Apex 2019 Concept தொலைபேசியும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கு முதல் ஜனவரி மாதத்தில் Vivo தனது Apex 2019 Concept தொலைபேசியினை அறிமுகம் செய்தது.
Vivo Apex 2019 Concept தொலைபேசி Notch, Punch Hole போன்ற வடிவமைப்புகள் இல்லாமல் Full Screen Display கொண்டிருக்கின்றது. ஒளிப்படங்களை எடுக்க பின்புறம் Dual Camera வழங்கப்படுகின்றது.
Apex 2019 model 5G வழங்கப்படுகிறது. இதற்கென Qualcomm நிறுவனத்தின் Snapdragon X50 5G Modem வழங்கப்படுகிறது. இத்துடன் Snapdragon 855 Processor, 256GB. Memory, 12GB RAM வழங்கப்படுகிறது.
Vivo Concept தொலைபேசியிதவிர Vivo 120 watt Super Flash Charging தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் முழுமையாக Charging செய்துவிடும் என Vivo குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM