நீரிழிவு நோயால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும் என்றாலும், குறிப்பாக கண், சிறுநீரகம், இதயம் மற்றும் கால் நரம்புகள் ஆகிய நான்கு உறுப்புகள் கடுமையாகவும், முழுமையாகவும் பாதிக்கும் என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.
இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இசிஜி மற்றும் ரெட்டினோ பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை செய்தால் இதயம், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் நீரிழிவு நோயின் பாதிப்பை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
நீரழிவு நோய் கால்களையும், பாதங்களையும், கால் நரம்புகளை பாதித்து இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய, Sensitometer எனப்படும் ஒரு கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்வார்கள். இதன்போது கால் நரம்பின் செயல்பாடு (Hot. Cold. Pain) என மூன்று நிலைகளில் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் கால்களில் உங்களுடைய உணர்வுகள் எப்படி செயற்படுகின்றன என்பதை துல்லியமாக கண்டறியலாம். அதன் மூலம் நீரிழி வு நோயின் பாதிப்பு காலில் எவ்வளவு உள்ளது என்பதை அறியலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்காததே இத்தகைய சிக்கல்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணம். அதனால் நீரிழிவு நோயை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது தான் சரியான தீர்வு.
ஒருவருக்கு நீரிழிவு நோய் உருவாகத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே அதனுடைய பாதிப்புகள் தெரியத் தொடங்கும். அதனால் நீரிழிவு நோயை வரும் முன் காப்பதே சிறந்தது. நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் 20% எனில், அதனை மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் மீட்டெடுத்து, இயல்பான நிலைக்கு கொண்டு வர இயலும். ஆனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தபடாமல் அதன் பாதிப்பு 80% இருந்தால், அதனை சிகிச்சைகளின் மூலம் முழுமையாக மீட்டுருவாக்கம் செய்ய இயலாது. அதனை கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.
சிலர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, கால்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டு, பின்னர் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் தேவையான அளவிற்கு நிவாரணத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM