கௌதம புத்தரின் சிலைகளை சேதப்படுத்துவது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கச் செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அது, பௌத்த மதத்தினரை உணர்வு ரீதியாகப் புண்படுத்துகின்ற செயலுமாகும்.
அதே போன்று ஏனைய மதத்தவர்களது மத வழிபாட்டுத் தலங்களை, மத அடையாளங்களை அழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும். அது ஏனைய அந்தந்த மதத்தவரையும் உணர்வு ரீதியாக புண்படுத்தவே செய்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
அதேபோல், கௌதம் புத்தரை வழிபடுகின்ற மக்களே இல்லாத இடங்களில், பிற மதத்தவர்கள் வாழுகின்ற நிலையில், அங்கே கௌதம புத்தரின் சிலைகளை வைப்பதும் அந்தந்த மதங்களைச் சார்ந்த மக்களது உணர்வுகளைப் புண்படுத்துகின்ற செயலாகும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
அதேபோல் ஏனைய மதத்தவர்களும் தமது மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமான செயற்பாடாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM