இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் 500 சிறிய பஸ்களில் கணிசமான பஸ்களை பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் உறுதியளித்தார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் குழுக்கூட்டம் நேற்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் குழு அறை இரண்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க மற்றும் அமைச்சின் செயலாளர் புகையிரத நிலைய பொது முகாமையாளர் இ.போ.ச.தலைவர் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்குழுக்கூட்டத்தின்போது உறுப்பினர் அ. அரவிந்தகுமார் உரையாற்றுகையில், பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் இ.போ.ச. "ஈ" ரக சிறிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
இச் சேவைகள் முறையாகவும் கிரமமாகவும் ஈடுபடுத்தப்படாததால் தோட்ட மக்கள் மற்றும் வெவளியில் தொழிலுக்கு செல்வோர், மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இ.போ.ச. பஸ் சேவைகள் முறையாக இடம்பெறின் பயனாளிகளுக்கு பெரும் நன்மை கிடைப்பதுடன் அரசுக்கான வருமானம் மேலோங்கும். அத்துடன் பலருக்கு தொழில் வாய்ப்புக்களும் கிட்டும்.
இவ்வகையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் இ.போ.ச. பஸ்கள் இரவு வேளைகளில் அந்தந்த தோட்டங்களிலேயே தரித்து நிறுத்தப்பட்டு மறுதினம் காலை சேவையில் ஈடுபடவும் வேண்டும். கிராமத்தவர்கள் குறிப்பிட்ட பஸ்களின் சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இரவு வேளைகளில் தோட்டப் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் தோட்டங்களில் பயணிகளை இறக்கிவிட்டு மறுதினம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும்போது காலதாமதங்கள் ஏற்படுவதினால் பயனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கமுடியும்.
பதுளை, கொழும்பு புகையிரதங்களில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆகவே பயணிகளின் நன்மை கருதி கூடுதலான ரயில் பெட்டிகளை இணைக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பதிலளிக்கையில், இந்தியாவிலிருந்து தருவிக்கப்படவுள்ள 500 "ஈ" ரக சிறிய பஸ்களில் கணிசமான பஸ்களை பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தாங்கள் குறிப்பிட்டதற்கமைய பஸ்களை பெருந்தோட்டங்களிலேயே இரவு வேளைகளில் தரித்து நிறுத்துவதற்கும் தோட்டப் பகுதிகளிலிருந்து சாரதி மற்றும் நடத்துனர்களை இணைத்துக் கொள்ளல் வேண்டுமாயின் தோட்டப் பகுதிகளிலிருந்து இ.போ.ச. பஸ்களுக்கு சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் சேவையாற்றுவதற்கு உரிய பெயர்ப் பட்டியலொன்றையும் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் பதுளை–கொழும்பு புகையிரத சேவையில் அதிக பெட்டிகளை இணைப்பதானால் மேலும் புகையிரத இயந்திரங்களை இணைக்க வேண்டும்.அதற்கான புகையிரத இயந்திரங்கள் போதியளவு எம்மிடமில்லை. இப்பிரச்சினையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM