இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும் வரலாற்று சிறப்பு மிக்க இடமுமான சிகிராயா பகுதியை மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன பார்வையிடச் சென்றார்.
இதன் போது அப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்லும் மலசலகூடம்,கடைத்தொகுதிகள் , மலைக்கு செல்லும் பாதைகள் மற்றும் குளங்களை பார்வையிட்டார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர், சிகிரியா பிரதேச சபையின் கீழ் உள்ள இப்பகுதி சிறந்த முறையில் காணப்படுகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். இலங்கையில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைதரும் இடங்களில் சிகிரியா காணப்படுகிறது. ஆகவே இதனை நாம் பாதுகாப்பதுடன் சுற்றுலாதுறை மேம்படுத்த மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக காணப்படுகிறது.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மிக குறைந்த அளவாக காணப்படுவதால் இப்பிரதேச வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அறிய முடிந்ததாகவும் அதற்கு மாற்று வேலைத்திட்டம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடாத்திய பின்னர் அதனை ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் போது மத்திய மாகாண நூலக சேவை தலைவர் கீர்த்தி துனுவில, சிகிரியா பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM