அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் இலங்கை பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்யதியாவுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, இலங்கைக்கு எதிர்வரும் 27ஆம் திகதி குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
எனினும், தவிர்க்க முடியாத திட்டமிடல் முரண்பாடுகளால், அவரால் இலங்கைக்கான பயணத்தை இம்முறை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்திருந்தது. அமெரிக்காவுடனான படைகளை நிலைப்படுத்தல் தொடர்பான ‘சோபா’ உடன்பாட்டுக்கு, இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் பயணம் ரத்துச் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், “பொம்பியோவின் இந்தப் பயணத்தின் போது, ‘சோபா’ உடன்பாடு குறித்துப் பேசத் திட்டமிடப்பட்டிருக்கவில்லை. அவரது இலங்கைப் பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கை வரத் திட்டமிட்டிருந்தபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோசுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும், இந்தப் பயணம், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக, நேற்றுமுன்தினம் இரவே தமக்கு தெரியவந்தது எனவும் அந்த அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM