அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 48 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது.
382 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவரும்போது 3.5 ஆவது ஓவரில் அனாவசிமாக சவுமி சர்கார் 10 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அதன்படி பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டமை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இருப்பினும் அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கி சகிப் அல்ஹசனுடன் தமீம் இக்பால் கைகோர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இதனால் பங்களாதேஷ் அணி 10 ஓவர்களின் முடிவில் 53 ஓட்டத்தையும், 15 ஓவர்கள் முடிவில் 84 ஓட்டத்தையும் 18 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களையும் கடந்தது.
இந் நிலையில் 18.1 ஆவது ஓவரில் ஸ்டொனிஸுடைய பந்து வீச்சில் சகிப் அல்ஹசன் 41 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி 102 இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹுமுடன் ஜோடி சேர்ந்தாட ஆரம்பித்த தமீம் இக்பால் 20.4 ஆவது ஓவரில் அரைசதத்தை பூர்த்திசெய்தார். எனினும் அவர் 24.1 ஆவது ஓவரில் மிச்செல் ஸ்டாக்குடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் வந்த லிட்டன் தாஸும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடி 29.2 ஆவது ஓவரில் 20 ஓட்டத்துடன் வெளியேறினார். இதனால் பங்களாதேஷ் அணி 29.2 ஓவரில் 175 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது.
இதன் பின்னர் வெற்றியின் வாய்ப்பு அவுஸ்திரேலிய அணிக்கு அதிகமாக காணப்பட்டபோதிலும் பின்னர் ஜோடி சேர்ந்தாடிய மாமதுல்லா மற்றும் மற்றும் முஷ்பிகுர் ரஹும் அதிரடி மூலம் அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை சிதறடித்தனர்.
அதனால் பங்களாதேஷ் அணி 34 ஓவரில் 200 ஓட்டங்களை கடந்ததுடன், 40 ஓவரில் 245 ஓட்டங்கயைும் பெற்றது.
இந் நிலையில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 60 பந்துகளுக்கு 136 ஓட்டங்கள் தேவைப்பட்டது எனினும் ஆடுகளத்தில் இருந்த முஷ்பிகுர் மற்றும் மாமதுல்லா ஆகியோர் தொடர்ந்தும் போராடி வந்தனர்.
45 ஓவரில் பங்களாதேஷ் அணி 300 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 82 ஓட்டம் தேவை என்ற நிலை உருவானது. கடினமான இலக்கு என எண்ணி போராட்டத்தை கைவிடாத பங்களாதேஷ் அணியினர் தொடர்ந்தும் அதிரடி மூலம் மைதானத்தை அதிர வைத்தனர்.
இருப்பினும் 45.3 ஆவது ஓவரல் மாமதுல்லா மொத்தமாக 50 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 69 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த சபீர் ரஹ்மான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்மிழந்தார்.
இதனால் அந்த ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட கொல்டர் நைல்லுக்கு ஹெட்ரிக் எடுக்கும் வாய்ப்பொன்று கிட்டியது, இருந்தபோதும் அந்த வாய்ப்பினை அடுத்து களமிறங்கிய மெய்டி ஹசான் தகர்த்தார்.
இறுதியாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்று, 48 ஓட்டத்தனால் தோல்வியை சந்தித்தது.
ஆடுகளத்தில் முஷ்பிகுர் ரஹும் 97 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம், 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 102 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்செல் ஸ்டாக், கொல்டர் நைல் மற்ஸம் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், சாம்பா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
photo credit : icc
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM