எந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை

Published By: Digital Desk 4

20 Jun, 2019 | 07:17 PM
image

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எந்தவித  தீர்வின்றி நிறைவடைந்துள்ளது.

கல்முனை வடக்கு தமிழ்பிரிவு  பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக நான்காம் நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது இன்று அத்துரலிய ரத்தின தேரரும் அவருடன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் சென்றிறுந்தனர்.

மேற்படி பிரதேச செயலகம் தரம் உயர்த்து தொடர்பில்  இருக்கின்ற சிக்கல் நிலை தொடர்பிலும், சமரசமான முறையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறியும் நோக்கிலும், உண்ணாவிரதிகள் சார்பான குழுவொன்றும் கல்முனை முஸ்லிம் மக்கள் சார்பான குழுவொன்றுக்குமிடையில்  பேச்சுவார்த்தை ஒன்று கல்முனை நகர சபை மண்டபத்தில் வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் ரத்தின தேரர் அகியொரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

இதன் போது இருதரப்பு நியாங்களும் முன்வைக்கப்பட்டது அந்தவகையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பிப்பிலான குழுவினர் தங்களது நியாங்களை முன்வைக்கையில் இந்த பிரதேச செயலகமானது தரமுயர்த்துவதில் எங்களுக்கு எவ்வித அட்சேபனையும் இல்லை. அனால் இதில் சில சிக்கல் நிலை நிலவுகின்றது.

 அதாவது நிலத்தொடர்பற்று காணப்படுதல், மற்றும் கடைத்தொகுதிகள் பாதிக்கப்படுதல், எல்லை நிர்ணயம் முரண்பாடாக காணப்படுதல், மற்றும் இனத்துவேசத்தினை உண்டுபண்ணுவதாக அமைதல் போன்ற விடயங்களை இதன் போது தங்கள் தரப்பு நியாயங்களாக முன்வைத்திருந்தனர்.

மேற்படி தெரிவிக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த  உண்ணாவிரதாரிகள் சார்பாக சென்ற கல்முனை தமிழ் மன்றக் குழுவினர் இவ்விடயங்கள்  தொடர்பில் தங்கள் தரப்பு நியாயம் சார்ந்த வகையிலான கருத்துக்களை முன்வைத்தனர். இவ்வாறாக ஒரு மணித்தியாலத்திற்க்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது

இதனை செவிமடுத்திருந்த ரத்தின தேரர் மிகவும் விரைவாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டுபிடியுங்கள் உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு  பேச்சுவார்த்தையானது எந்த தீர்வின்றி இழுபறியில் முடிவடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58