சிரியா ஈராக்கில் ஏற்பட்டுள்ள தோல்விகளை தொடர்ந்து எஸ் அமைப்பு தனது கவனத்தை இந்து சமுத்திரத்தை நோக்கி திருப்பியுள்ளது இதன் காரணமாக இந்தியா இலங்கைக்கு ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள காவல்துறையினரிற்கு இந்திய புலனாய்வு அமைப்பு அனுப்பியுள்ள மூன்று கடிதங்களில் இந்த ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளது.
ஈராக் சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை இழந்த பின்னர் தங்கள் நாடுகளில் இருந்தபடியே வன்முறைகளில் ஈடுபடுமாறு ஐஎஸ் அமைப்பு தனது உறுப்பினர்களிற்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றது என இந்திய புலனாய்வு அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கொச்சியில் வணிகவளாகங்கள் உட்பட முக்கியமான இடங்கள் இலக்குவைக்கப்படலாம் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தனது இணைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது இது தாக்குதல் நடைபெறலாம் என்பதற்கான அறிகுறி எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM