உலகளாவிய ரீதியில் போரால் இடம்பெயர்ந்தவர்கள் தொகை கடந்த வருடத்தில் 70 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தால் நேற்று புதன்கிழமை புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் 70.8 மில்லியன் பேர் இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் அதற்கு முந்திய வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அந்த வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தால் வெளியிடப்பட்ட வருடாந்த உலகளாவிய போக்குகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த இடம்பெயர்ந்த அகதிகள் தொகை யானது 30 வருடங்களுக்கு முன்பிருந்ததை விடவும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தினசரி சராசரியாக 37,000 புதிய இடம்பெயர்வுகள் இடம்பெற்று வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது போர், மோதல்கள், துன்புறுத்தல்கள் என்பனவற்றிலிருந்து பாதுகாப்பு தேவையான மக்களது தொகையில் நீண்ட கால ரீதியில் அதிகரிக்கும் போக்கு காண ப்படுவதை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது" என ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிரான்டி தெரிவித்தார்.
வெனிசுலாவிலான நெருக்கடிகள் தொட ர்பான தகவல்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையில் மேற்படி இடம்பெயர்ந்த அகதிகளின் தொகை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருப்பதாக தோன்றுவதாக அவர் கூறினார்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் தாய் நாட்டிலான மோதல்கள், போர் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், தாம் பிறந்த நாட்டை விட்டு வெளியேறி சர்வதேச பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலையில் அகதி அந்தஸ்து வழங்கப்படாத புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் என 3 பிரிவினர் உள்ளடங்குவதாக தெரிவித்த பிலிப்போ கிரான்டி, கடந்த ஆண்டில் உலகளாவிய அகதிகள் தொகை 25.9 மில்லியனாகவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொகை 3.5 மில்லியனாகவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொகை 41.3 மில்லியனாகவும் உயர்ந்துள்ளதாக கூறினார்.
உலகளாவிய அனைத்து அகதிகள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியி னர் சிரியா, ஆப்கானிஸ்தான், தென் சூடான், மியன்மார் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
சிரியாவிலிருந்தே அதிகளவான அகதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். அந்நாட்டிலிருந்து 6.7 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ள அதேசமயம் அந்நாட்டிற்கு அடுத்த இடத்திலுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து 2.7 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் 92,400 அகதிகள் மட்டுமே மீளக் குடியமர்த்தப்பட்டு ள்ளனர். இது மீளக்குடியமரக் காத்திருப்பவர்கள் தொகையில் 7 சதவீதம் மட்டுமேயாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM