எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீல.சு.க புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளது ; ஜனாதிபதி

Published By: Digital Desk 4

19 Jun, 2019 | 08:35 PM
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காதவகையில் புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று (19) முற்பகல் கொழும்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாடுமுழுவதும் உள்ள பெண் உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மகளிர் முன்னணியை வலுவூட்டுவதும் அதன் பங்களிப்பை கட்சிக்காக தொடர்ச்சியாக பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது. 

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் வலுவான அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்சியை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்தார். 

நாட்டின் பொதுமக்கள் மற்றும் தாய்மாரின் கட்சியாக கருதப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்டும் செயற்பாடுகளின்போது பெண் பிரதிநிதிகளுக்கு விசேட கடமைகள் வழங்கப்படுவதுடன், நிகழ்கால சமூக சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு நல்லதோர் சமூகத்தினையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமையென்றும் தெரிவித்தார். 

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கருத்து தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாஇ துமிந்த திசாநாயக்கஇ மஹிந்த அமரவீரஇ பைசர் முஸ்தபாஇ லசந்த அழகியவன்னஇ திலங்க சுமதிபாலஇ சாந்த பண்டாரஇ ஆரியவதி கலபதி ஆகியோர் உள்ளிட்ட சிரேஷ்ட செயற்பாட்டாளர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்பின் பிரதான செயலாளர் சந்திரிகா டி சொய்சாஇ பிரதி தலைவர் சுமித்ரா பிரியங்கனி அபேவீர மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெண் உறுப்பினர்கள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15