(ஆர்.யசி. எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் முடியும் வரையிலோ அல்லது ஒரு மாத காலம் தாம் அமைச்சுப்பதவிகளை எடுக்கப்போவதில்லை என கூறி ஹபீர் ஹசீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இன்று மீண்டும் ஹபீர் ஹசீம் அமைச்சுப்பதவியை ஏற்றது எவ்வாறு? ஒரு மாதகாலம் முடிந்துவிட்டதா ? அல்லது விசாரணை முடிந்துவிட்டதா? என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமலன்சா சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று சபை அமர்வுகளின் போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லண்சா:- சபாநாயகர் அவர்களே, நான் ஒரு கத்தோலிக்க நபர் என்ற வகையில் இந்த கேள்வியை எழுப்புகின்றேன்.
கடந்த ஈஸ்டர் தாக்குதலை அடுத்து குற்றவாளிகளை கண்டறியும் விசாரணைகள் முடியும் வரையிலோ அல்லது ஒரு மாதகாலத்திற்கு அமைச்சுப்பதவிகளை எடுக்க மாட்டோம் என கபீர் ஹாஷிம் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினார்கள்.
ஆனால் ஹபீர் ஹசீமும் , ஹலீமும் அமைச்சுப்பதவிகளை எடுத்துள்ளனர். அப்படியென்றால் இவர்களின் ஒருமாத காலம் முடிந்துவிட்டதா அல்லது விசாரணை முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதில் தெரிவித்த சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல :- இவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் தான் பதவி பிரமாணம் செய்துள்ளனர். ஆகவே உரிய நபர்களிடம் கேளுங்கள். இவர்கள் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமைக்கும் பாராளுமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM