யாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று

30 Nov, 2015 | 11:33 AM
image

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி அதி­வேக ரயில் முன்­பாக பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­மை­யினை தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்ட வடி­வங்­களில் ஒன்­றாக கருத வேண்டும் என்று நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.

அர­சியல் கைதி­களின் போராட்டம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்படும் நிலையில் திடீ­ரென இடம்பெற்ற குறித்த மாண­வனின் தற்­கொலைச் சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை தொடர்பில் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், கடந்த வெள்ளிக்­கி­ழமை கொக்­குவில் இந்­து­கல்­லூ­ரியில் பயின்று வந்த 18 வயது நிரம்­பிய ராஜேஸ்­வரன் செந்­தூரன் என்ற மாணவன் அதி­வேக ரயில் முன்­பாக பாய்ந்து கவ­லைக்­கி­ட­மான நிலையில் தற்­கொலை செய்து கொண்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து குறித்த சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் தற்­கொலை செய்­து­கொண்ட மாண­வனின் சட­லத்தின் அருகில் இருந்து கண்­டெ­டுக்­கப்­பட்ட கடி­தத்தில் அவர் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யுறுத்­தியே தற்­கொலை செய்­து ­கொண்­டுள்ளார் என அறிய முடிந்­தது. அதன் வாயி­லாக இதன் பின்­ன­ணியில் அர­சியல் கார­ணியே உள்­ளது என்­ப­தையும் தெளி­வாக அறிய முடிந்­தது.

இந்­நி­லையில் மாண­வனை எவரும் ரயில் முன்­பாக தள்­ளி­யி­ருக்­கலாம் என்ற கோணத்தில் சந்­தே­கங்­களும் எழுந்­துள்­ளன.அதேபோல் பொலிஸார் முன்­னெ­டுத்து வரு­கின்ற விசா­ர­ணை­களில் ஒருவர் மாணவன் தானாக வந்து ரயில் முன்­பாக பாய்ந்து தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார் என்றும் அதனை தான் நேரில் கண்­ட­தா­கவும் சாட்­சியம் அளித்­துள்ளார்.

இந்­நி­லையில் குறித்த மாண­வனின் கடிதத்தில் தமிழ் ஈழ விடு­த­லையை கொடு ஒளி­யூட்டு, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லா­வது தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யுங்கள் என்ற கோரிக்­கை­க­ளுமே வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தமை இங்கு குறிப்­பிட்டு கூற­தக்க விடயம்.

அதனால் இந்த கடிதத்தின் கோணத்தில் இந்த சம்­ப­வத்தை நோக்­கினால் இது தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கான போராட்­டங்­களில் ஒன்று என்ற கோணத்­தி­லேயே பார்க்­கப்­பட வேண்டும். அதனால் இது தமிழர் உரி­மைக்­கான போராட்டம் என்றே கரு­தப்­பட வேண்டும் என்­பதே நவ சம­ச­மாஜ கட்­சியின் நிலைப்­பாடு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:10:26
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29