2000 ஏக்கர் காணிகளுக்கு வர்த்தமானி விளம்பரம் செய்தமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இரா.துரைரெட்ணம்

Published By: Digital Desk 4

18 Jun, 2019 | 03:33 PM
image

 மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு . வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2000 ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில் வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சினால் வர்த்தமானி விளம்பரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில்  இன்று  செவ்வாய்க் கிழமை  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், 

மண்முனை மேற்கு பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்காகவும், விவசாய மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 2000 ஏக்கர் காணிகள், மாவட்டத்தின் அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும் தெரியாத வகையில் அப்போதைய வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சராகவிருந்த ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய காலத்தில், குறிப்பாக 2017ஆண்டு ஜூன் மாதம் 05ம் திகதி  வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆயிலியடிச்சேனையில் 507.25 ஏக்கரும், கண்டியநாற்றில் 726 ஏக்கரும், பன்சேனையில் 548.5ஏக்கர் காணியும் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது. 

இக்காணிகளில் பன்சேனை பகுதியில் 50 ஏக்கரில் சோளார் மின் உற்பத்திக்காக பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

மாவட்டத்தில் உள்ள யாருக்கும் தெரியாத வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. இச்செயற்பாட்டின் மூலமாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலையேற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் அரச  தரப்பினர் உரிய கவனம் செலுத்தி உடனடியாக வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05
news-image

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில்...

2025-01-17 17:49:03
news-image

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம்...

2025-01-17 17:34:46
news-image

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை காணிகளை வேறு...

2025-01-17 22:17:46