ஈக்குவடோரை 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி தாக்கி 13 நாட்களின் பின் கட்டட இடிபாடுகளின் கீழிருந்து 72 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த மீட்பு சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மானுவேல் வஸ்குயஸ் என்ற அந்த நபர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெனிசுலாவைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி ஈக்குவடோரை தாக்கிய பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி 660 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் மனாபி மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது பகுதியாக இடிந்து விழுந்திருந்த கட்டட இடிபாடுகளின் கீழிருந்து மானுவேல் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட போது கடும் உடல் வரட்சிக்குள்ளாகியிருந்த அவர், தன்னிலை இழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் தனது பாத விரல்களை இழந்திருந்ததுடன் சிறுநீரக பிரச்சினைக்கும் உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM