உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மஹேந்திர சிங் தோனி தனது ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் 63 வயதான தீவிர கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிருக்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா–பாகிஸ்தான் மோதலை பார்க்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார்.
இது குறித்து முகமது பஷிர் மென்செஸ்டரில் நேற்று முன்தினம் அளித்த ஒரு பேட்டியில்,
‘உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா-–பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக இங்கிலாந்து வந்தேன். இந்த போட்டிக்கான ஒரு டிக்கெட்டின் தொகையானது, நான் லண்டனிலிருந்து சிக்காகோவுக்கு திரும்பும் விமான டிக்கெட் தொகைக்கு சமமானதாகும். இந்த போட்டிக்காக டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை. அதற்கு காரணமான தோனிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தோனி மிகவும் பிசியாக இருப்பார் என்பதால் அவரை நான் செல்போனில் அழைப்பது கிடையாது. குறுந்தகவல்கள் அனுப்பி அவருடனான எனது பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். டிக்கெட் தருவதாக தோனி உறுதி அளித்ததாலேயே முன்கூட்டியே இங்கு வந்தேன். தோனி மிகுந்த மனிதநேயம் மிக்கவர். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியிலிருந்து எனக்கு அவர் டிக்கெட் வழங்கி வருகிறார். எனக்கு தோனி செய்வது போல் வேறு யாரும் செய்வார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. எனக்கு இலவசமாக ஒரு டிக்கெட் கிடைப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
தோனிக்கு எதிர்பாராத நினைவுப்பரிசை வழங்க கொண்டு வந்திருக்கிறேன். அவரை சந்தித்து இந்த பரிசை வழங்க முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியின் ரசிகர் சுதிரும் (இந்திய தேசிய கொடியின் வண்ணத்தை வரைந்தபடி எல்லா ஆட்டங்களை யும் நேரில் பார்க்க செல்லும் ரசிகர்) நானும் ஒரே அறையில் தங்க ஹோட்டலில் முன்பதிவு செய்து இருக்கிறேன். சுதிருக்கு நான் ஒரு செல்போனை பரிசாக வழங்கினேன். அவர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். இதுபோன்ற சிறிய விடயங்கள் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது உடல் நிலை சீராக இல்லாவிட்டாலும் கிரிக்கெட்டுக்காக மட்டுமே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
முகமது பஷிர் போட்டியை பார்க்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகளை ஒரு சேர வைத்திருக்கும் பழக்கம் கொண்டவர். முகமது பஷிர் நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணி வீரர்களை சந்தித்து பேசினார். அவர் இந்திய வீரர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM