ஹொங்கொங்கில் குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைக்காக சீனாவிடம் ஒப்படைப்பதற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே இந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி கேரீ லாம், நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளைக் கேட்டறியும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
அத்துடன் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான திகதி எதையும் நாங்கள் விதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் பாதுகாப்புக்கான சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் அதுகுறித்து ஆலோசித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM