தனிமையிலிருந்த மூதாட்டியின் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்

Published By: Digital Desk 4

16 Jun, 2019 | 11:18 AM
image

யாழ்ப்பாணம், அரியாலை புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள், அவரை வாள் முனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசியைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனா். 

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) இடம்பெற்றது.

மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கின்றனா். ஓய்வு பெற்ற அரச ஊழியரான மூதாட்டி தனிமையில் வாழ்ந்து வருகிறார். 

அவரது வீட்டுக்குள் கதவுகளை உடைத்தும், கூரையை பிரித்தும் இரு வழிகளால் கொள்ளையா்கள் வீட்டுக்குள் நுழைந்து, கூரிய ஆயுதங்களைக் காட்டி மூதாட்டியை அச்சுறுத்தியுள்ளதுடன், அவரது வாய்க்குள் துணியை அடைந்து கொடுமைப்படுத்தியுள்ளது. 

அவரது வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியுள்ள கொள்ளைக் கும்பல் பணம், நகை மற்றும் தொலைபேசியைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. 

இந்த நிலையில் இன்று காலை மூதாட்டியைப் பார்க்கச் சென்ற ஒருவர், அங்கு கொள்ளை நடந்துள்ளதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் கூடி வாய்க்குள் துணி அடையப்பட்ட நிலையில் மூச்சுவிட சிரமப்பட்ட மூதாட்டியை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

சம்பவம் தொடா்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வீட்டில் இதற்கு முன்னரும் சில தடவைகள் கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக அயலவா்கள் கூறுகின்றனா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42