19வது திருத்தம் பல நெருக்கடிகளை  ஏற்படுத்தியுள்ளது - மஹிந்த ராஜபக்ஷ

Published By: R. Kalaichelvan

15 Jun, 2019 | 04:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எம்மை  பழிவாங்கும் நோக்கில்  தூரநோக்கமற்ற விதத்தில்  நல்லாட்சி அரசாங்கம்  உருவாக்கிய அரசியலமைப்பின்  19வது திருத்தம்  இன்று பல  பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைகின்றது.

 மாகாண சபை தேர்தலை  நடத்தாமல் இருப்பது  பாரிய  ஜனநாயக உரிமை மீறளாகும்  இடம்பெறவுள்ள அனைத்து தேர்லையும் எதிர்க் கொள்ள தயார் என  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலை கால்டன் இல்லத்தில்   இன்று  இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இடைப்பட்ட பதவி  காலத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களை பாதிக்கும்  வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் அரசாங்கததின்  தான்தோன்றித்தனமான செயற்பாட்டின் காரணமாக  ஜனாதிபதி  தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி   அமைச்சரவையினை   கூட்டவில்லை.  இதற்கு   19வது அரசியலமைப்பின் ஊடாகவே வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்மை  பழிவாங்கும் நோக்கத்தில்  தூரமற்ற  அரசியல்  செயற்பாடுகள் மற்றும் ஏற்படும் எதிர்விளைவுகள் தொடர்பில் ஆராயாமல் அரசியலமைப்பின் 19வது திருத்தம்  கொண்டு வரப்பட்டது.    

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல  பிரச்சினைகளுக்கு இத்திருத்தமே  பிரதான காரணம். நிறைவேற்று துறைக்கும்,   சட்டவாக்க துறைக்கும் இன்று   அதிகாரம் தொடர்பிலும்   முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

 தேர்தலின் ஊடாகவே  ஆட்சி மாற்றம் ஏற்படும்.  இடம் பெற்று முடிந்த   உள்ளுராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டுள்ள  மாகாண சபை தேர்தலே  இடம் பெற்றிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22