இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் அருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இன்று காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவர் மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்று அங்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்திற்கும் விஜயம் செய்த பேராயர் அங்கு புனரமைக்கப்பட்டுவரும் ஆலயத்தினை பார்வையிட்டார்.
இதன்போது குறித்த தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனைகளிலும் பேராயர் ஈடுபட்டார்.
இந்த விஜயத்தின்போது இராணுவ அதிகாரிகள், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட பலர் இணைந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM