ஐ.தே.க. வின் மேதினக் கூட்டம் : நாட்டின் பல பாகங்களிருந்தும் பெருந்திரளானோர் பங்கேற்பு 

Published By: MD.Lucias

01 May, 2016 | 07:01 PM
image

ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம்  கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.   

மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்திலிருந்து ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியின் ஊர்வலம்  மருதானை புஞ்சி பொரளை, பொரளை ஊடாக  கெம்பல் பார்க் மைதானத்தை வந்தடைந்தது. 

புஞ்சி பொரளையில் அமைக்கப்பட்டிருந்த மேடையொன்றில்  நின்றிருந்த  பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான  ரணில் விக்ரமசிங்க  ஊர்வலத்தில் வந்த மக்களை  வரவேற்றுக்கொண்டிருந்தார்.  

அத்துடன் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தலைமையிலான ஜனநாயக அமைப்பு   ஹைட்பார்க் மைதானத்தில் கம்பல் பார்க் மைதானத்தை வந்தடைந்தது.   

மேலும்  பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான தொழிலாளர் தேசிய காங்கிரஸ்  காலி முகத்திடலிலிருந்து  ஊர்வலமாக கம்பல் பார்க் மைதானத்தை வந்தடைந்தது. 

 வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து  பகுதிகளிலிருந்தும்  ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தில்  பெருந்திரளான  மக்கள்  கலந்துகொண்டிருந்தனர்.  

ஊர்வலத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான  கபிர் ஹஷீம் சுஜீவ சேனசிங்க ஹரீன் பெர்னாண்டோ  ரஞ்சித் மத்தும பண்டார எரான் விக்ரமரட்ன  அஜித் பி. பெரெரா  உள்ளிட்டோர் வருகை தந்தனர். 

"நாங்கள் போகும் பயணம் நாட்டை பாதுகாக்க அவர்கள் போகும் பயணம்  அவர்களின் நன்மைக்காக"  ""தொழிலாளர் துயர் துடைக்கும் அரசாங்கம்   மக்களை  ஏமாற்றி குடும்ப ஆட்சியை நடத்தியவர்கள் ஒழிக""     "" இது ரணில் இருக்கும் ௪ஜித் இருக்கும் அசராங்கம் யாரும்  அசைக்க முடியாது"" போன்ற  கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஐககிய தேசிய கட்சி ஆதரவாளர்கள்  ஊர்வலத்தில் கலற்துகொண்டனர். 

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ௪ஜித் பிரேமதாச ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய  பதாதைகளும்  தோரணைகளும் அமைக்கப்பட்டு  ஊர்வலமாக   எடுத்துச் செல்லப்பட்டன.   

ஒவ்வொரு துறைசார்  பிரிவினரும்  தமது  தொழிற்துறை  குறித்த கண்காட்சிகளை  ஐக்கிய  தேசியக் கட்சியின் ஊர்வலத்தில்     அரங்கேற்றியிருந்தனர்.  

இன்று மாலை நான்கு மணியளவில்   ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம்  கம்பல் பார்க் மைதானத்தில்  ஆரம்பமாகியதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தலைவர்கள்  உரையாற்றினர்.    

மேதினக் கூட்டத்தில்  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  ரவூப் ஹக்கீம்   உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58