பரீட்சை தரப்படுத்தலை வெளியிடாதிருக்க தீர்மானம்!

Published By: Vishnu

15 Jun, 2019 | 04:02 PM
image

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய எதிர்காலத்தில் அகில இலங்கை ரீதியில் தரப்படுத்தல்களை வெளியிடாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கல்வி அமைச்சர் தெரிவித்ததாவது, 

சாதாரண தரப் பரீட்சையிலும் , புலமைப் பரிசில் பரீட்சையிலும் இவ்வாறு போட்டித்தன்மையை ஏற்படுத்துவதனால் மாணவர்கள் மீது அதிக சுமை ஏற்படுத்தப்படுகின்றது. எனவே இது குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சினால் விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷேட குழுவின் மூலம் முதல் நிலை தரப்படுத்தல்களை மேற்கொள்ளது பரீட்சையில் சித்தியடைந்திருந்தால் ' சித்தி " என்பதை மாத்திரம் குறிப்பிடும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

தற்போது நடைமுறையிலுள்ளதைப் போன்று அகில இலங்கை ரீதியில் தரப்படுத்தல்களை மேற்கொண்டு மாணவர்களிடையே அதிக போட்டித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.  அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான வெட்டுப்புள்ளிகளுடன் கூடிய பரீட்சைகள் இல்லை. இந்நிலையில் இலங்கையில் பரீட்சைகள் நடத்தப்படுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கமைய 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பிலும் தீர்மானம் எடுக்க வேண்டும். 

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சைக்காக வேறு ஒரு முறைமை அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது. இதே வேளை புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய எதிர்காலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் என தரப்படுத்தல்களை அறிவிக்கப் போவதில்லை. எவ்வாறிருப்பினும் இது தேர்தல் காலம் என்பதால் அடுத்த வேலைத்திட்டத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22