இலங்கை கத்தோலிக்க ஆயர்  பேரவையின் புதிய நியமனங்கள் வெளியாகின

Published By: MD.Lucias

01 May, 2016 | 04:42 PM
image

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் நடப்பாண்டுக்கான புதிய நியமனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் உப தலைவராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையும் செயலாளராக சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை நிரந்தர உறுப்பினர் குழுவில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஜோசப் பொன்னையா ஆண்டகை, வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, வியானி பெர்னாண்டோ ஆண்டகை, ஹெரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை ஏனைய நியமனங்கள் வருமாறு,

நிதித் துறை ஆணைக்குழுவின் தலைவராக வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகையும் உபதலைவர்களாக மெக்ஸ்வெல் கிறன்வில் சில்வா ஆண்டகையும் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும், துறவறம் மற்றும் குருக்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகையும் உப தலைவர்களாக நோபேர்ட் அந்திராடி ஆண்டகையும், லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும்,

மறைக்கல்வி, விவிலியப் பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக மெக்ஸ்வெல் கிறன்வில் சில்வா ஆண்டகையும் உப தலைவராக நோயல் இம்மானுவேல் ஆண்டகையும்,

திருவழிபாடு, கலாசாரப் பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக கிளிட்டஸ் பெரேரா ஆண்டகையும் உப தலைவராக நோயல் இம்மானுவேல் ஆண்டகையும்,

சமூக தொடர்பாடலுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக றேமன் விக்கிரமசிங்க ஆண்டகையும், உப தலைவராக லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும்,

பொதுநிலையினருக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக நோபேர்ட் அந்திராடி ஆண்டகையும் உப தலைவர்களாக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்  ஆண்டகையும் கிளிட்டஸ் பெரேரா ஆண்டகையும்,

நீதி, சமாதானம் மனித முன்னேற்றப் பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக வியானி பெர்னாண்டோ ஆண்டகையும் உப தலைவராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும்,

மத உரையாடல், உறவுகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும் உப தலைவராக கிளிட்டஸ் பெரேரா ஆண்டகையும்,

புலம்பெயர்ந்தோர், சுற்றுலா மற்றும் சிறைச்சாலை பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக ஹெரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகையும் உப தலைவராக லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும்,

ஒழுக்கவியல் திருச்சபை சட்ட ஆலோசகராக நோபேர்ட் அந்திராடி ஆண்டகையும் யோசவாஸ் செயலகத்திற்கு வியானி பெர்னாண்டோ ஆண்டகையும் யோசாவாஸ் நிதியத்திற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் பேரவையின் பொறுப்புகளுக்காக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02