(எம்.எப்.எம். பஸீர்)
பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக பொலிஸ் தலைமையகத்துக்கு மொத்தமாக 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர கூறினார்.
கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இரு பொலிஸ் அத்தியட்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவுக்கே இந்த 27 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றதாக அவர் மேலும் கூறினார்.
இந்த 27 முறைப்பாடுகளில் முறைப்பாடுகளில் அதிகமானவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகவே கிடைக்கப் பெற்றுள்ளன.
இந் நிலையில் இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கையளிக்கப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM