அரசாங்க பிரதிநிகளை சந்திக்கவுள்ள இ.போ.ச ஊழியர்கள்

Published By: Digital Desk 4

13 Jun, 2019 | 11:00 AM
image

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பதவி உயர்வுக்கு ஏற்ற சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி, கடந்த இரு நாட்களாக சிறிகொத்தவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

அதன்பின்னர். தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் பல பிரதேசங்களில் இலங்கை போக்குவரத்து சபை சேவையாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11