அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நண்பகல் (10) முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை வீதியைச் சேர்ந்த திருமதி கிருபைராஜா கனகம்மா வயது 53 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருக்கோவில் விநாயகபுரம் இல - 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள வீட்டில் குறித்த பெண் தனது மகளின் ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை குறித்த பெண் காலை 11.30 மணியளவில் அயல் வீட்டுக்கு சென்றிருந்த வேளை தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டுக்கு சென்றதாக அயல் வீட்டார் தெரிவித்தனர்.
இந்நிலையில் வயல் வேலை முடித்து 12.00 மணியளவில் வீடு திரும்பிய பெண்ணின் கணவரான சண்முகநாதன் கிருபைராசா என்பவர் வீட்டு மண்டபத்தில் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியை அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என தேடியுள்ளார் ஆனால் மனைவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குடும்பத்தினரும் பெண்ணைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை (12) வீட்டின் பின்புறமாக கட்டப்பட்டுக் கிடந்த குளியல் அறையில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியும், மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான பி.சிவகுமார் மேற்பார்வையில் குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரால் தோண்டி எடுக்கப்பட்டதுடன் சடலத்தின் முகத்தில் இரத்த கசிவுகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடயங்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதுடன் திருக்கோவில் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM