கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போன உயிர்: இயந்திரப் பழுதை சரிசெய்ய முயன்றவருக்கு நேர்ந்த கொடுமை

Published By: Digital Desk 8

12 Jun, 2019 | 01:31 PM
image

இந்தியா, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வைக்கோல் சுற்றிக் கட்டும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளியொருவர் திங்கள்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நீலியாம்பட்டி முத்துராஜா தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விளைநிலத்தில் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்து, இயந்திரம் மூலம் வைக்கோல் சுற்றிக் கட்டும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், வைக்கோல் சுற்றிக் கட்டும் இயந்திரத்தை இயக்கும் பணியில் கண்ணன் (25) ஈடுபட்டுள்ளார்.



திங்கள்கிழமை மாலை இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தபோது பழுதை நீக்க கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த பகுதி மக்களை பெரிதும் ஆச்சரியத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

2025-11-08 15:33:48
news-image

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை...

2025-11-08 14:08:37
news-image

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ;...

2025-11-08 12:50:02
news-image

காணியை விற்ற பணத்தில் மருத்துவம் படிக்க...

2025-11-08 12:47:57
news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51