மாநாயக்க தேரர்களை சந்தித்த முஸ்லிம் உறுப்பினர்கள் வலியுறுத்தியது என்ன? 

Published By: Vishnu

11 Jun, 2019 | 06:40 PM
image

(எம்.மனோசித்ரா)

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராகவுள்ளோம். அதற்காக அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுத்தக் கூடாது என்று கூட்டாக பதவி விலகிய முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். 

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இனவாதத்தைத் தூண்டுவதற்காகவும், ரிஷாத் பதியுதீனை பாதுகாப்பதற்காகவும் அரசியல் நோக்கத்துடனும் நாம் அனைவரும் இந்த முடிவை எடுத்ததாக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் நாம் அதற்காக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.

முஸ்லிஸ்களை அடிப்படைவாதிகளாகச் செயற்பட வேண்டாம் என்று கூறிவிட்டு சில பௌத்த மதகுருமார்கள் சிங்கள மக்களை தவறான முறையில் வழிநடத்துகின்றனர். மக்களும் அதற்கு ஏற்பட தவறான வழியில் செல்கின்றனர். பொலிஸாரும் இவற்றை கண்டுகொள்வதில்லை. இவ்வாறானவர்களால் தான் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகவும் பதவி விலகிய முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58