உபாதை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் வலது கை மணிக்கட்டில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது.
இதனால் 3 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு தவானுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தால் உலகக் கிண்ணத் தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாட மாட்டார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின்போது தவான் மொத்தமாக 109 பந்துகளை எதிர்கொண்டு 16 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 117 ஓட்டங்களை விளாசினார்.
தவான் தொடர்பான இந்த அறிவிப்பானது இந்திய ரசிர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், இந்திய அணிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இருந்தபோதும் தவானின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அணிக்குள் ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் இணைத்துக் கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM