“தெரிவுக்குழு தொடர்பான சர்ச்சை ஒரு அரசியல் விளையாட்டு ”

Published By: Daya

11 Jun, 2019 | 03:49 PM
image

(நா.தனுஜா)

தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனவே இவை அனைத்திற்கும் மத்தியில் அரச உத்தியோகத்தர்களே சிக்கிக்கொண்டு திணறுகின்றனர் என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

தெரிவுக்குழு விசாரணைகளை பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிடுவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. அதேபோன்று இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் மீது குற்றஞ்சுமத்தும் முயற்சிகளும் இடம்பெறாமலில்லை.

அதேவேளை தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனவே இவை அனைத்திற்கும் மத்தியில் அரச உத்தியோகத்தர்களே சிக்கிக்கொண்டு திணறுகின்றனர். சுருக்கமாக இதனை ஒரு அரசியல் விளையாட்டு என்றே கூறவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கடுந்தொனியில் எச்சரித்தார்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு இருக்கின்றது. அதனை நிறுத்துமாறு கூறுகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனினும் இவ்விவகாரத்தில் ஒருவித அரசியல் விளையாட்டு இடம்பெறுகின்றது என்றே கூறவேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51