புற்றுநோயால் ஏற்படும் வலிகள் மிகப் பெரிய மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தரும். இந்த தருணத்தில் இந்த வலிகளை குறைப்பதற்காகவும் வலி நிவாரண நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டன என வைத்தியர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயை முதல் மூன்று நிலைகளில் கண்டுபிடித்தால் அவர்களுக்கு சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கூட்டு சிகிச்சை, சிறப்பு சிகிச்சை ஆகியவற்றை அளித்து அவர்களை குணப்படுத்த இயலும்.
ஆனால் புற்றுநோய் நான்காம் நிலையை எட்டி விட்டால் அந்த புற்று நோயை குணப்படுத்துவது கடினம். அதே தருணத்தில் அந்த புற்றுநோயால் ஏற்படும் வலிகள் மிகப் பெரிய மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தரும். இந்த தருணத்தில் இந்த வலிகளை குறைப்பதற்காகவும் வலி நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த வலி நிவாரண மையத்தில் அனுமதிக்கப்படும் புற்றுநோயாளிகள் அவர்களின் வலியை குறைப்பதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் வலியைப் பற்றி மனதளவில் வலிமையாக கிரகித்துக் கொள்ளும் அளவில் மனதை வைத்திருப்பதற்கான விசேட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களின் மனநிலையை சீராக்குவதற்கு இசை சிகிச்சையும் வழங்கப்படுகிறது. தற்பொழுது இத்தகைய புற்றுநோயாளிகளை வலி நிவாரண நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
புற்று நோயாளிகளுக்கு மட்டும் அல்லாமல் நாட்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்களுக்கும் இத்தகைய வலி நிவாரண நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM