(இராஜதுரை ஹஷான்)
பிரச்சினைகளுக்கு தீர்வு பெறும் நோக்கில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் தற்போது பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு அப்பாட்பட்டு எல்லை மீறி செல்கின்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பிலான இரகசியங்கள் பொது மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இராணுவ மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இரகசிய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தகவலறியும் சட்ட மூலத்தை அடிப்படைவாகக் கொண்டு பாராளுமன்ற தெரிவு குழு வரப்பு மீறி செயற்படுவதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியும் அதனை பொருட்படுத்தாமல் செயற்படும் நிறைவேற்று அதிகாரத்தை அவமதிப்பதாக அமையும்.
மீண்டும் சட்டத்துறைக்கும், நிர்வாகதுறைக்கும் இடையில் அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்தும் நடவடிக்கைககளே முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM