மன்னார் சமூர்த்தி பயனாளிகளில் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் இணைப்பு ; சாள்ஸ் எம்.பி குற்றச்சாட்டு

Published By: T Yuwaraj

10 Jun, 2019 | 02:42 PM
image

மன்னார் சமூர்த்தி பயனாளிகளில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கான உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை  இடம்பெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 10,113 பேருக்கு உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், 'மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த வயோதிப தாய் ஒருவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட தனக்கு சமூர்த்தி உரித்து வழங்கவில்லையென்றும், ஆனால் புதுத்தளத்தைச் சேர்ந்த 120 பேரின் பெயர்கள் சமூர்த்தி உதவி பெறுபவர்களாகக் காட்சிப் படுத்தப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட எந்த சமூகத்தினருக்காவது சமூர்த்தி உதவியை வழங்குங்கள். ஆனால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இங்கு சமூர்த்தி பயனாளிகளாக இணைக்க வேண்டாம்.

 வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயனாளிகளாக இணைக்கப்பட்டார்களா ? என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெளிவுபடுத்த வேண்டும்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23
news-image

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள்...

2023-05-29 16:17:42
news-image

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2023-05-29 16:12:12