ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்கவோ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்தார்.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஊடகங்களுக்கு தான் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ஓரிடத்திலேனும் ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்கவோ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை.
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பணிவான வேண்டுகோள் ஒன்றாகவே அவ்வறிக்கையை வெளியிட்டேன்.
இவ்வறிக்கை தொடர்பில் பிழையான அர்த்தங்களை பல்வேறு தரப்பினர் வெளியிடுவதற்கு முயன்றுள்ளனர். ஆரோக்கியமான ஊடகம் ஒன்றுக்காக வேண்டி ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதே தனது எதிர்பார்ப்பாகும்.
தற்போது 99 வீதமான அரசியல் செய்திகளே ஊடகங்களில் வெளியிடப்படுவதனால், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பிற காரணிகள் தொடர்பில் அறிக்கையிடல் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒன்றிணைவோம்.
ஊடகங்களில் காணப்படும் சுதந்திரத்தின் ஒரு பிரிவையேனும் தனக்கும் வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஊடக நலன்புரி விடயங்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களில் அரசியல் தலையீடுகளை தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும், இவ் அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், ஊடகத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் அறிந்திருக்கவில்லை.
ஊடகவியலாளர்களுக்கு உயரிய அந்தஸ்த்தை பெற்றுக் கொடுப்பதற்காக தான் செயலாற்றுவதாகவும், தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான அர்த்தம் கொள்ளாமையினாலேயே இப்பிழையான கருத்துக்கள் எழுந்ததுள்ளன.
பொலிஸ் மாஅதிபர், சட்ட மா அதிபர் மற்றும் ஊடகத்துறை செயலாளர் ஆகிய முக்கோணங்களையும் உள்ளடக்கிய ஓர் இயந்திரத்தை உருவாக்கிக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM