பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நடால் 12 ஆவது முறையாகவும் சம்பியனாகியுள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 2 அம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடாலும் 4 ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மும் மோதினர்.
சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12 ஆவது முறையாகவும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றி சம்பியனானார்.
இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை கைப்பற்றிய நபர் என்ற புதிய சாதனையையும் இவர் புரிந்துள்ளார். இதற்கு முன்பு அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் அவுஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
33 வயதான நடால் இந்த மைதானத்தில் மொத்தம் 95 போட்டிகளில் விளையாடி 93 போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் களிமண் தரை போட்டிகளில் நானே ராஜா என்பதை நடால் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 8ஆம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (அவுஸ்திரேலியா), 38ஆம் நிலை வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் (செக்.குடியரசு) மோதினார்.
70 நிமிடங்களில் வோன்ட்ரோசோவாவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த ஆஷ்லி பார்டி 6-–1, 6–-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை சூடினார்.
பிரெஞ்ச் பகிரங்கத்தை அவுஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
23 வயதான ஆஷ்லி பார்டி 2014ஆம் ஆண்டில் டென்னிஸில் இருந்து விலகி கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுத்தார்.
பெண்களுக்கான பிக்பாஷ் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடிய அவர் 2016ஆம் ஆண்டில் மறுபடியும் டென்னிஸ் களம் புகுந்து இப்போது சிகரத்தை எட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM