விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் கிளை காரியாலயமொன்றை மே தினத்தன்று கிருலப்பனையில் திறந்தால் பொது எதிரணியில் மறைந்துள்ள திருடர்கள் பலரை கைது செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என டிஜிட்டல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பொது எதிரணியுடன் நேருக்கு நேர் மோதுவதற்கு நாம் தயாராக உள்ளோம். மே தினத்திற்கு இலட்சக்கணக்கானோரை நாம் களமிறக்குவோம். நாம் மோதுவதற்கு தயார்.
பொது எதிரணியினர் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வாரா என்பது தொடர்பில் எந்தவொரு தகவல்களும் கிடையாது. இருந்தாலும் மறைமுக பிரமுகராக சில வேளைகளில் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிட்ட கோட்டேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளார் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிடுகையில்,
தொழிலாளர்களின் தினத்தை கொண்டாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது. அது முதலாளித்துவ கட்சி என்று சிலர் தொழிலாளர்களுக்காக நீலக்கண்ணீர் வடிக்கின்றனர். இருந்தபோதிலும் தொழிலாளர்களுக்காக பல்வேறுப்பட்ட நலத்திட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சியே பெற்றுக்கொடுத்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்திட்டத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டப்ளியூ.ஆர்.டீ பண்டாரநாயக்கவாக இருக்க முடியும் . ஆனாலும் அதனை உரிய வகையில் ஒழுங்குப்படுத்தலுக்கு உட்படுத்தி சரிவர அமுல்ப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். நலத்திட்டங்களை செயல்ப்படுத்தியுள்ளோம். தொழிலாளர்களுக்காக சட்டமூலங்களை நாம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளோம். ஆனால் தொழிலாளர்கள் தொடர்பில் வீண் கண்ணீர் வடிக்கின்றனர்.
இம்முறை மே தினம் என்ற பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக பொது எதிரணியினர் மே தினத்தை கொண்டாடுகின்றனர். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியானது அர்ப்பணிக்கும் தொழிலாளர்களின் தினம் என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடவுள்ளோம். எமது மே தினத்தில் இணைய கூடியவர்கள் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிக்க தயாராக இருக்க கூடியவர்களாகும்.
ஆனால் தற்போது திரைக்கு பின்னால் இருந்த சுப்பர் மேன் தற்போது வௌியே வந்துள்ளார். அவரது வருகை பொது எதிரணியினை இல்லாமல் செய்து விடும். அந்த சுப்பர் மேன் வேறு யாருமில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக் காரணம் என்று கூறப்பட்டவர் பஷில் ராஜபக்ஷவாகும்.ஆனாலும் விமல் வீரவன்ஸ போன்றோர் வெட்கமின்றி பஷில் ராஜபக்ஷவுடன் ஒரு மேடையில் அமர்ந்துள்ளனர்.
அத்துடன் பொது எதிரணியுடன் நேருக்கு நேர் மோதுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை பெற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது மே தின கூட்டமாகும். இதன்படி கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்திற்கு இலட்சக்கணக்கானோரை நாம் களமிறக்குவோம்.நாம் மோதுவதற்கு தயார். பொது எதிரணியினர் தயாரா? விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் கிளை காரியாலயமொன்றை மே தினத்தன்று கிருளப்பனையில் திறந்தால் பொது எதிரணியின் மறைந்துள்ள திருடர்கள் பலரை கைது செய்யவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எம்மால் இலகுவாக நீக்க முடிந்தது. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது கூட தாய்லாந்து சென்று உலகமே தேடும் உதயங்க வீரதுங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றார். இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையையும் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.
மறைவான பிரமுகராக
மைத்திரி கலந்து கொள்ளலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வாரா என்பது தொடர்பில் எந்தவொரு தகவல்களும் கிடையாது. இருந்தாலும் மறைமுக பிரமுகராக சில வேளைகளில் கலந்து கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM