(எம்.மனோசித்ரா)
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 150 - – 200 மில்லி மீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 100 –- 150 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் குருணாகல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை தொடக்கம், மாத்தறையிலிருந்து பொத்துவில் வழியாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறு பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் ் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM