(நா.தினுஷா)
அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு நாட்டில் தேசிய ஒற்றுமையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

மகாநாயக்க தேரர்களின் இந்த நிலைபாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சியும் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
குற்றம் சுமத்துவதை தனது துருப்பு சீட்டாக பயன்படுத்தி கொண்டு போலி அரசியல் நாடகங்களை எதிரணி அரங்கேற்றி வருகிறது. ஆயினும் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கும் ஒவ்வொரு சூழ்ச்சியிலும் அவர்கள் தேல்வியையே சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் தோல்வியையே சந்திப்பார்கள்.
எமது அரசாங்கம் குற்றவாளிகளை அங்கீகரிப்பது இல்லை. அவர்களை பாதுகாப்பதும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியதீன் மீது எதிரணியினர் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் போலி நாடகமாகும்.
குற்றச்சாட்டுகளில் உண்மைத் தன்மை இருந்திருந்தால் குற்றம் சுமத்தியவர்களே பொலிசாரிடம் சாட்சிகளுடன் தமது வாக்கு மூலங்களை பதிவு செய்திருப்பார்கள். ஆனால் இதுவரையில் எதிரணியினர் எந்த வாக்கு மூலத்தையும் முன்வைக்க வில்லை என்று குறிப்பிட்ட அவர் ராஜினாமா செய்த அனைவரும் தமது அமைச்சுக்களை மீண்டும் பொறுபபு ஏற்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM