மூன்றாவது மொழியை படிக்கச் சொல்வது மாணவர்களுக்கு பின் சுமையை கொடுக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
“ தமிழகத்தில் தற்பொழுது இருமொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. இதற்கு பதிலாக மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க பார்க்கிறது. ஏற்கெனவே மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை கற்கிறார்கள்.

மூன்றாவதாக ஒரு மொழியை கற்பது அவர்களுக்கு பரீட்சை சுமையை அதிகரிக்கும். தற்போது மூன்று மொழிகள் கற்பதால் எந்த பலனும் மாணவர்களுக்கு ஏற்படப்போவதில்லை. தேவைப்பட்டால் கல்லூரிப் படிப்புக்கு பின் எந்த மொழியை வேண்டுமானாலும் அவர்கள் கற்றுக் கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான நரசிம்மராவ் அவர்களுக்கு 16 மொழிகள் தெரியும். அவற்றை அவர் சுய விருப்பத்தின் பேரிலேயே கற்றுக்கொண்டார். தற்போது கூட சென்னையில் உள்ள ஹிந்தி பிரச்சார சபா மூலமாக 6 லட்சம் பேர் பரீட்சை எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற முறையில் மத்திய அரசு எதையும் திணிக்க கூடாது. திணிப்பு என்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது.” என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM