தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்

Published By: Vishnu

04 Jun, 2019 | 10:25 AM
image

நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. 

மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற வக்­கிர அர­சியல் தீர்­மா­னத்­தோடு மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு நட­வ­டிக்­கையின் விளை­வாக அந்த அனர்த்தம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. 

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பின் னால், தமிழ் மக்கள் ஏகோ­பித்த நிலையில் அணி திரண்­டி­ருந்த இறுக்­க­மா­னதோர்  அர­சியல் சூழல் அது. அந்தச் சூழல் மிகவும் இறுக்­க­மா­னது. அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்ற அர­சியல் அபி­லாஷை அப்­போது மக்கள் மனங்­களில் கனன்று கொண்­டி­ருந்­தது. தமிழ் மக்கள் மீது ஒடுக்­கு­மு­றை­க­ளையும் அடக்­கு­மு­றை­க­ளையும் ஏவி விட்­டி­ருந்த அரசும் பேரின அர­சி­யல்­வா­தி­களும், தமிழ் மக்­களின் இந்த அர­சியல் நிலைப்­பாட்டை எந்த வகை­யி­லேனும் அடித்து நொறுக்­கி­விட வேண்டும் என்று கங்­கணம் கட்­டி­யி­ருந்­தார்கள். 

சமா­தான பேச்­சு­வார்த்­தைகள், இணக்க அணு­கு­மு­றைகள் என்­பன தோற்றுப் போயி­ ருந்த நிலையில் தனி­நாட்டுத் தீர்­மா­னத் தைத்தவிர வேறு வழி­யில்லை என்ற நிலை ­மைக்குத் தமிழ் மக்கள் தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள். இதனால் 1973 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை மாநாட்டில் தனி­நாட்டுக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு, அதற்­காகப் போரா­டு­வது என்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. 

தனி­நாட்டுக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், அன்­றைய ஜனா­தி­ப­திக்கும் தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தலைவர் அமிர்­த­லிங்­கத்­திற்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சுவார்த்தைக­ளின்­போது, அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக மாவ ட்ட சபை­களை உரு­வாக்­கு­வது என்றும், இனப்­பி­ரச்­சி­னைக்குப் படிப்­ப­டி­யாகத் தீர்வு காணும் வழி­மு­றையைக் கையாள்­வது என்றும் உடன்­பாடு எட்­டப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் மாவட்ட சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி இணங்கி முன்­வந்­தி­ருந்­தது.  

தமிழர் விடு­தலைக் கூட்­டணி தனி­நாட்டுக் கோரிக்­கையை முன்­வைத்து 1977 ஆம் ஆண்டு தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது. இந்த வெற்­றியை பேரின அர­சி­யல்­வா­தி­க­ளினால் சகித்துக்கொள்ள முடி­ய­வில்லை. அதே­போன்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தனி­நாட்டுக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்­ளவும் அவர்கள் தயா­ராக இருக்­க­வில்லை. 

மறு­பக்­கத்தில், தனி­நாட்டுக் கோரிக்­கை க்கு முர­ணான வகையில் மாவட்ட சபை ஆட்­சி­மு­றையை ஏற்­றுக்­கொண்டு அதற்­கான தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வந்­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் முடிவை தமிழ் இளை­ஞர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. முக்­கிய அர­சியல் தலை­வர்­களும் கூட அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர். தனி­நாட்டுக் கோரிக்­கையை முன்­வைத்துத் தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருந்த போதிலும் அந்த இலக்கை அடைவதற்­கான வழித்­த­டங்கள் பற்­றியோ அல்­லது அதற்­கான வியூ கம் குறித்தோ தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை­வர்கள் தீர்­மா­னங்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. 

ஆனால் கல்­வியில் தமிழ் மாண­வர்­க­ளுக்கு எதி­ராகத் தரப்­ப­டுத்தல் முறையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்த அர­சாங்­கத்தின் மீது அள­வற்ற வெறுப்­பையும் கசப்­பு­ணர்­வையும் கொண்­டி­ருந்த தமிழ் இளை­ஞர்கள் தனி­நாட்டுக் கொள்­கையைக் கடைப்­பி­டித்து, அந்த இலக்கை அடை­வ­தற்­காக ஆயுதப் போராட்ட வழி­மு­றையை மிகவும் இர­க­சி­ய­மாக மேற்­கொண்­டி­ருந்­தனர். இதனால் ஆங்­காங்கே அரச ஆத­ர­வா­ளர்­க­ளான தமிழ்ப் பிர­மு­கர்­க­ளுக்கு எதி­ரா­கவும் பொலிஸார் மற்றும் ஆயு­தப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ரா­கவும் அவ்­வப்­போது தாக்­கு­தல்கள் இடம்­பெற்று வந்­தன. 

அந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே தமிழ் ஆயுதப் போராட்­டத்தின் முக்­கிய நிகழ்­வாக நடந்­தே­றிய நீர்­வேலி வங்­கிக்­கொள்­ளையும் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த ஆயுத வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இரா­ணு­வத்­தி­ன­ரையும் ஆயுதந் தாங்­கிய பொலிஸா­ரையும் அர­சாங்கம் தீவி­ர­மாகக் களத்தில் இறக்கி எதிர் நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டிருந் ­தது. இந்தப் பின்­ன­ணி­யி­லேயே 1978 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்டு வரப்­பட்டு, தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதே­வேளை, 1956 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் வட­மா­கா­ணத்தில் ஐக்­கிய தேசிய கட்சி தனது செல்­வாக்கை இழந்­தி­ருந்­தது. மாவட்ட மட்­டத்தில் அர­சியல் கட்­சிக்­கு­ரிய கட்­ட­மைப்­பையும் அது கொண்­டி­ருக்­க­வில்லை. இந்த  நிலையில் 1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் ஒரு உறுப்­பி­ன­ரை­யா­வது வெற்றி பெறச் செய்து, தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் ஏகோ­பித்த வெற் ­றியைக் குலைத்து, தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் தனது அர­சியல் இருப்­புக்கு இடம் தேடி­விட வேண்டும் என்று அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன தீர்­மா­னித்­தி­ருந்தார்.  

வேட்­பாளர் தெரிவும் விளை­வு­களும்

இந்த நிலையில் முன்னாள் பாட­சாலை அதி­பரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய அ.தியா­க­ரா­ஜாவை 1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்­தலில் தனது வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசிய கட்சி களத்தில் இறக்­கி­யி­ருந்­தது. அவரை எப்­ப­டி­யா­வது தேர்­தலில் வெற்­றி­பெறச் செய்து, தமிழ் மக்கள் மத்­தியில் தனது அர­சியல் இருப்பை நிலை­நாட்டிக்கொள்ள வேண்டும் என்­பதே அன்­றைய ஐக்­கிய தேசிய கட்­சியின் உள்­ளார்ந்த நோக்­க­மாக இருந்­தது. அதற்­காக அவர்கள் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்த வழி­முறை பேரின அர­சி­யல்­வா­தி­களின் குரூர அர­சியல் நோக்­கத்தைக் கொடூ­ர­மான முறையில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த அ.தியா­கராஜா 1970 ஆம் ஆண்டு பாராளு­மன்றத் தேர்­தலில் வட்­டுக்­கோட்டைத் தொகு­தியில் அகில இலங்கைத் தமிழ் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் அன்­றைய தள­ப­தி­யாகத் திகழ்ந்த அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்தைத் தோற்­க­டித்­தி­ருந்தார்.  

அத்­த­கைய அர­சியல் வெற்றி வீர­னாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­யாகச் சென்ற அ.தியா­க­ராஜா, சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் தலை­மை­யி­லான அப் ­போ­தைய ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்து, 1972 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தமிழ் மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை இன மக்­களின் நலன்­களைப் பாதித்த முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­புக்கும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்தார்.   

அத்­த­கைய பின்­ன­ணியைக்கொண்ட அ.தியா­க­ரா­ஜா­வையே, 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபி­வி­ருத்திச் சபைத் தேர்­தலில் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் முக்­கிய வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசியக் கட்சி கள­மி­றக்­கி­யி­ருந்­தது. பேரி­ன­வாத அர­சியல் கட்­சி­களில் எந்தத் தமி­ழரும் தேர்­தலில் போட்­டி­யிடக் கூடாது என்று இளை­ஞர்கள் செய்­தி­ருந்த எச்­ச­ரிக்­கை­யையும் மீறி தியா­க­ராஜா வேட்­பாளர் மனு தாக்கல் செய்­தி­ருந்தார்.

அந்தத் தேர்தல் 1981ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திக­திக்கு நாள் குறிக்­கப்­பட்­டி­ருந்­தது. தேர்­த­லுக்கு 11 நாட்கள் இருந்­த­போது, துவிச்­சக்­கர வண்­டியில் வந்த இரண்டு அடை­யாளம் தெரி­யாத நபர்­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு ஆளா­கிய தியா­க­ராஜா, வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­னின்றி இறந்து போனார்.   

வேட்­பாளர் தியா­கராஜா கொல்­லப்­பட்ட சம்­ப­வ­மா­னது, நாட்டின் பழம் பெரும் கட்­சி­யா­கிய ஐக்­கிய தேசிய கட்­சிக்கு விடுக்­கப்­பட்ட நேர­டி­யான சவா­லா­கவே அன்­றைய ஜனா­தி­ப­தியும் அந்தக் கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய ஜே.ஆர்.ஜய­வர்­தன கரு­தினார். இந்தக் கொலையின் பின்­ன­ணியில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியே இருந்­தது என்ற அனு­மா­னமும் இருந்­தது.

இந்த நிலையில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி தேர்­தலில் ஏகோ­பித்த வெற்றி பெறு­வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்­துடன் எப்­ப­டி­யா­வது ஐக்­கிய தேசிய கட்­சியின் செல்­வாக்கை தேர்­தலில் நிலை­நி­றுத்த வேண்டும் என்ற நோக்­கத்தில் அமைச்­சர்­க­ளான சிறில் மத்­தியூ மற்றும் காமினி திசா­நா­யக்கா ஆகி­யோ­ருடன், பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், மேல­திக செய­லாளர்  மற்றும் அமைச்­ச­ர­வையின் செய­லாளர் ஆகி­யோரை ஜனா­தி­பதி ஜய­வர்­தன யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்பி வைத்­தி­ருந்தார். இந்த உயர் மட்ட அரச குழு­வி­ன­ருடன், தேர்தல் கட­மைக்­கென மேல­தி­க­மாக 500 பேரைக் கொண்ட பொலிஸ் படையும் மே மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்­தது. 

மாவட்ட சபை தேர்தல் பிர­சாரம் சூடு பிடித்­தி­ருந்த அந்தத் தரு­ணத்­தில்தான், மறுநாள் மே மாதம் 31 ஆம் திகதி. யாழ்ப்­பாணம் நாச்­சிமார் கோவி­ல­டியில் நடை­பெற்ற தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தேர்தல் கூட்­டத்தில் 3 பொலிஸார் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­கினர். அவர்­களில் இருவர் அந்த இடத்­தி­லேயே கொல்­லப்­பட்­டார்கள். மற்­று­மொ­ரு­வ­ரான முஸ்லிம் பொலிஸ்­காரர் காய­ம­டைந்தார். இறந்­த­வர்­களில் ஒருவர் தமிழர் மற்­றவர் சிங்­க­ளவர். 

இந்த வன்­மு­றை­யை­ய­டுத்து, அந்தத் தேர்தல் கூட்டம் குழப்­பத்தில் கலைந்­தது. ஆனால் அந்த சம்­ப­வத்­திற்­கான எதிர்­வினை அன்­றி­ரவு படு­மோ­ச­மான வன்­மு­றை­யாக வெடித்­தது. அது தமிழ் அர­சியல் வர­லாற்றில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் மாறாத ஒரு வடு­வாகப் பதி­வா­கி­யுள்­ளது. 

வன்­முறை வெடித்­தது; நூலகம் எரிந்­தது யாழ்.நக­ரமும் அழிந்­தது

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தேர்தல் பிர­சார கூட்டம் கலைந்த அரை மணித்­தி­யா­லத்தில் அந்த இடத்­திற்கு சீருடை அணிந்த பொலி­ஸாரும், சிவி­லு­டையில் இருந்­த­வர்­களும் பெரும் எண்­ணிக்­கையில் ட்ரக் வண்­டி­களில் கொண்டு வந்து இறக்­கி­வி­டப்­பட்­டார்கள். அவர்­களின் வெறி­யாட்­டத்­திற்கு நாச்­சிமார் கோவிலும் அதன் அயலும் இலக்­கா­கி­ன. ஆல­யத்­திற்கு அருகில் இருந்த வீடு­க­ளுக்கும் அங்கு காணப்­பட்ட வாக­னங்­க­ளுக்கும் தீவைக்­கப்­பட்­டது, அந்தப் பகு­தியே இதனால் சுடு­கா­டாகிப் போனது. 

மூன்று பொலிஸார் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்டு, அவர்­களில் இருவர் கொல்­லப்­பட்­ட­தற்­கான பழி­வாங்­க­லாக அந்த வன்­முறை அமை­ய­வில்லை. யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­தி­ருந்­த­வர்­களில் ஒரு சிங்­கள பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் சுட்டுக் கொல்­லப்­பட்­டு­விட்­டாரே என்ற இன­வாத சீற்­றமே அந்த வெறி­யாட்­டத்தில் மேலோங்கியிருந்­தது. வன்­மு­றைகள் நாச்­சிமார் கோவில் பகு­தி­யுடன் நிற்­க­வில்லை. யாழ். நக­ருக்குள் பரவி, அங்­கி­ருந்து யாழ்.நூல­கத்தை முற்­றாக எரித்து சாம்­ப­லாக்கும் வரையில் அது நீடித்­தது. இதனால் யாழ்.நகரம் பேர­ழி­வுக்குள்­ளா­கி­யது. இதனால் தமிழ் மக்­களின் அறிவுப் புதையல் அழிந்து போனது. அவர்­களின் கலா­சார பாரம்­ப­ரிய பொக்­கிஷம் அழிக்­கப்­பட்­டது.  கல்வி அறிவுத் தேட்­டத்தின் ஊற்­றுக்­கண்ணும் அடி­யோடு அழிக்­கப்­பட்­டது. 

அன்­றைய வன்­மு­றைகள் குறித்து பேச்­சுக்கள் நடத்தி பொலி­ஸாரை முகாம்­க­ளுக் குள் முடக்கி வைத்து அமை­தியை நிலை­நாட்ட வேண்டும் என்று யாழ்ப்­பா­ணத்தில் முகா­மிட்­டி­ருந்த அமைச்­சர்கள் மற்றும் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் நேர­டி­யாக கோரிக்கை விடுத்த யாழ். பிர­ஜைகள் குழு­வி­ன­ரிடம் அமைச்சர் ஒருவர் வெளிப்­ப­டுத்­திய கூற்று இந்த வெறி­யாட்­டத்தின் கோரத்­தன்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

அந்தக் குழுவில் இடம்­பெற்­றி­ருந்த ஒரு வர் அதனை, பின்னர் ஒரு சந்­தர்ப்­பத்தில் அதனை நினை­வு­கூர்ந்தார். 'நாங்கள் இப்­போது மூன்­றா­வது சிங்­கள சடலம் ஒன்றை கொழும்­புக்குக் கொண்டு செல்­கின்றோம். இதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்' என்று அந்த அமைச்சர் கடுமை தொனிக்க எங்­க­ளிடம் கூறினார் என்று அந்த நினை­வு­கூ­ரலில் அவர் தெரி­வித்­தி­ருந்தார். பின் விளை­வுகள் குறித்த அச்சம் கார­ண­மாக அந்த அமைச்சர் யார் என்­பதை அவர் பெய­ருடன் அடை­யா­ளப்­ப­டுத்­த­வில்லை. 

நாச்­சிமார் கோவி­லுடன் வன்­மு­றைகள் நிற்­க­வில்லை. யாழ்.நகரின் பல இடங்­க­ளிலும் அமைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ்ப் பெரி­யார்­களின் சிலைகள் அடித்து நொறுக்­கப்­பட்­டன. பூபா­ல­சிங்கம் புத்­த­க­சாலை உள்­ளிட்ட பத்­தி­ரிகை விற்­பனை நிலை­யங்­களும் கடை­களும் எரி­யூட்­டப்­பட்­டன. சந்தைக் கட்­டிடத் தொகுதி மற்றும் நவீன சந்தைக் கட்டிடத் தொகு­தி­களும் தீயிட்டு எரிக்­கப்­பட்­டன. தலை­ந­க­ரா­கிய கொழும்­புக்கு வெளியில் மாகாண மட்­டத்தில் 1961ஆம் ஆண்டு முதல் வெளி­யி­டப்­பட்டு வந்த ஒரே­யொரு தமிழ் நாளே­டா­கிய 'ஈழ­நாடு' பத்­தி­ரிகை அலு­வ­ல­கமும் எரித்து சாம்­ப­லாக்­கப்­பட்­டது. 

கண்ணில் அகப்பட்ட வாக­னங்கள் பொருட்கள் என்­ப­னவும் அந்த அட்­டூழியத் தீ மூட்­டலில் சிக்கி எரிந்து சாம்­ப­ராகிப் போயின. இந்த வன்­மு­றையில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் கட்சி அலு­வ­ல­கமும், பல வீடு­களும் தீவைத்து எரித்து அழிக்­கப்பட்டன. ஒரு வீட்­டி­னுள்ளே ஒளித்­தி­ருந்த நான்கு பேர் வெளியே இழுத்து வரப்­பட்டு கோர­மாகக் கொல்­லப்­பட்­டார்கள். 

யாழ். நகரின் பல இடங்­க­ளிலும் இந்த வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­டி­ய­போது, மறு­பக்­கத்தில் யாழ். நூல­கத்தை நோக்கி ஒரு குழு சென்­றது. அதில் பொலி­ஸாரின் சீருடை தரித்­த­வர்­களும் இருந்­த­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

யாழ். நூல­கத்தின் உள்ளே நுழைந்­த­வர் கள், பிரிவு பிரி­வாகச் செயற்­பட்டு, சந்­தனப் பெட்­ட­கங்­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த 16 ஆம் நூற்­றாண்டிலிருந்து கையினால் எழு­தப்­பட்ட 10 ஆயிரம் வரை­யி­லான புரா­தன ஓலைச்­சு­வ­டி­க­ளையும், தமிழ் மக்­களின் வர­லாற்று ஆவ­ணங்­களை உள்­ள­டக்­கிய பதி­வு­க­ளையும், பெறு­ம­தி­வாய்ந்த பல்­லா­யிரக்கணக்­கான  புத்­த­கங்­க­ளையும், பழைய நாளே­டு­களின் தொகுப்­புக்­க­ளையும் சேக­ரிக்­கப்­பட்­டி­ருந்த சஞ்­சி­கை­க­ளையும் அள்ளிக் கொண்டு வந்து நூல­கத்தின் மண்­ட­பத்தில் குவித்து அவற்­றுக்குத் தீ மூட்­டி­னார்கள். எல்­லாமாக சுமார் ஒரு இலட்சம் புத்­த­கங்­களை எரித்­த­துடன் அந்த வெறி­யர்கள் நிற்­க­வில்லை. கட்­டி­டத்தின் பல பகு­தி­க­ளுக்கும் தீவைத்து, முழு நூல­கத்­தையும் சாம்பல் மேடாக்­கி­னார்கள். 

பித்­த­லாட்­டமும் பேருண்­மையும்

ஆசி­யாவின் மிகப்பெரிய நூல­க­மாகத் திகழ்ந்த அதே­வேளை, பல்­துறை சார்ந்த பெரும் எண்­ணிக்­கை­யி­லான நூல்கள் மற் றும் வர­லாற்றுப் பதி­வு­களின் உள்­ள­டக்கம் கார­ண­மாக அற்­பு­த­மான நூலகம் என ஆசிய பிராந்­தி­யத்தில் பெயர் பெற்­றி­ருந்­தது. அத்­த­கைய பெருமை மிக்க யாழ். நூலகம் அமைச்­சர்­க­ளான சிறில் மத்­தியூ மற்றும் காமினி திசா­நா­யக்க இரு­வ­ரி­னதும் மேற்­பார்­வையில் அன்று எரி­யூட்­டப்­பட்டு நாச­மாக்­கப்­பட்­டது. அந்த நூலகம் கொழுந்­து­விட்டு எரிந்­ததை, அந்த சூழலில் அமைந்­தி­ருந்த யாழ். விருந்­த­கத்தில் (யாழ்ப்­பாணம் வாடி வீட்டில்) இருந்து அவர்கள் இரு­வரும் நேர­டி­யாகக் கண்டு இர­சித்­த­தையும் மனம் வெதும்­பிய நிலையில் சிலர் நேரில் கண்­டி­ருந்­தார்கள்.

நூல­கத்தின் சுற்றாடலில் அமைந்­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வே.யோகேஸ்­வ­ரனின் வீடும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யது. அங்கு சென்ற காடையர் கூட்டம், அந்த வீட்­டிற்கும் அயலிலிருந்த வீடு­க­ளுக்கும் தீவைத்­தது. அர­சாங்­கத்­தையும், அதன் அடக்­கு­முறை சார்ந்த போக்­கையும் வெளிப்­ப­டை­யாக விமர்­சித்து வந்த பாராளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வ­ரனை இலக்கு வைத்து காடை யர் கூட்டம் அவரைத் தேடிச்சென்­றி­ருந்­தது. ஆயினும் அந்த நள்­ளி­ரவுச் சம்­பவ நேரம் வீட்டில் தங்­கி­யி­ருந்த யோகேஸ்­வ­ரனும் அவ­ரு­டைய மனை­வியும் வீட்டிலிருந்து வெளியில் ஓடி தெய்­வா­தீ­ன­மாக உயிர் தப்­பி­னார்கள்.   யாழ். நூலக எரிப்பை நேர­டி­யாகக் கண்­டி­ருந்த சிறில் மத்­தியூ மற்றும் காமினி திசா­நா­யக்க ஆகிய இரு அமைச்­சர்­களும் உட­ன­டி­யாக யாழ். நூலகம் எரிக்­கப்­பட்­டமை ஒரு துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­பவம் என்றே வர்­ணித்­தி­ருந்­தார்கள். 'மது­போ­தைக்கு ஆளா­ கி­யி­ருந்த ஒரு சில பொலிஸ்­கா­ரர்­களே கட்­டுப்­பாட்டை இழந்து தாமா­கவே கொள்­ளை­ய­டிப்­ப­திலும் பொருட்­களைச் சூறை­யா­டு­வ­திலும் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். அது ஒரு துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­பவம்' என்று அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தார்கள். 

யாழ். நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்­ட­தையும் யாழ். நகரம் துவம்சம் செய்­யப்­பட்­ட­தையும் கொழும்பிலிருந்து வெளி­வந்த தேசிய தின­ச­ரிகள் என கூறப்­பட்ட சிங்­களம் மற்றும் ஆங்­கில நாளே­டுகள் கண்­டு­கொள்­ளவே இல்லை. 

அந்த அமைச்­சர்­களின் இந்தக் கூற்றே நூலகம் எரிக்­கப்­பட்டு, யாழ்.­ ந­க­ரமும் துவம்சம் செய்­யப்­பட்­டி­ருந்­ததன் பின்னர் பேரி­ன­வா­தி­க­ளி­னாலும், அவர்­க­ளுக்கு ஆத­ர­வான ஊட­கங்­க­ளி­னாலும் தொடர்ச்­சி­யாக மேற்­கோள்­காட்டி பிர­சாரம் செய்­யப்­பட்டு வந்­தது. அது தொடர்ந்து நீடிக்­க­வில்லை. 

தனி­நாட்டுக் கோரிக்­கைக்கு முர­ணான வகையில் மாவட்ட சபை ஆட்சி முறை­மையை ஏற்­றி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செயற்­பாடு குறித்து தமிழ் மக்கள் மத்­தியில் அதி­ருப்தி நில­விய போதிலும் யாழ். நூலக எரிப்பும், யாழ். நகர அழிப்பும் தமிழ் மக்கள் மனங்­களில் ஒரு வைராக்­கி­யத்தை உரு­வாக்கி இருந்­தது. தங்­களின் பாது­காப்­புக்­கென ஓர் அதி­காரம் வாய்ந்த நிர்­வாகக் கட்­ட­மைப்­புடன்கூடிய தனி அரசு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற உத்­வே­கத்தை ஏற்­ப­டுத்தியிருந்­தது. அந்த உத்­வே­கமே, அரச கட்­சி­யா­கிய ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தேர்­தலில் வாக்­க­ளிக்கக்கூடாது என்ற மன உறு­தியைக் கொடுத்­தி­ருந்­தது. இதனால் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி வெற்றி பெற்­றது. 

அந்தத் தேர்தல் வெற்­றியைத் தொடர்ந்து ஜூன் மாதம் 9 ஆம் திகதி கூடிய பாரா­ளு­மன்ற அமர்வில், யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பாக விவா­திக்­கப்­பட்­டது. அப்­போது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கமும், வெற்­றி­வேலு யோகேஸ்­வரன் ஆகிய இரு­வரும் யாழ். நூலக எரிப்பும் யாழ். நகர வன்­மு­றை­க­ளுக்கும் அர­சாங்­கமும் பொலி­ஸா­ருமே காரணம் என ஆதா­ரங்­க­ளுடன் நேர­டி­யாகக் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தார்கள். அவர்­க­ளு­டைய இந்தக் குற்­றச்­சாட்டு பாராளு­மன்ற உரை­களின் பதி­வேட்டில் பதிவு செய்­யப்­பட்­டது. அந்த விவா­தத்­தின்­போது உரை­யாற்­றிய அப்­போ­தைய அர­சாங்க பேச்­சா­ளரான காமினி திசா­நா­யக்க, பொலி­ஸாரே சேதங்­களை ஏற்­ப­டுத்­தினர் என்­பதைப் பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்டார்.

'பொலி­ஸா­ரினால் சில சேதங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அதை நாங்கள் மறுக்­க­வில்லை. அதற்­காக நாங்கள் முரண்­ப­டவும் முடி­யாது. பாராளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வ­ரனின் வீடு பொலி­ஸா­ரினால் எரிக்­கப்­பட்­டது' என பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்து உண்­மையை அவர் ஒப்­புக்­கொண்டார். 

அத்­துடன், 'பொலி­ஸாரின் மன உறுதி, அவர்­களின் உள­வியல் நிலை, நடத்தை தொடர்­பி­லான பாணி என்­பன குறித்தும் நாங்கள் கரி­சனை கொண்­டுள்ளோம்' என் றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 

அநீதி இழை­யோடும் அழகு...........?

பாரா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது நூலக எரிப்பும், யாழ். நகரின் மீதான வன்­மு­றை­களும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும், அமைச்­சர்­களோ அல்­லது அர­சாங்­கமோ அந்தப் பாதிப்­பு­க்க­ளுக்­காக தமிழ் மக்­க­ளிடம் மன்­னிப்பு கோர­வில்லை. இந்தப் பேர­ழிவு குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கவே இல்லை. நான்கு தினங்கள் வன்­மு­றை­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­களைக் கண்டுபிடித்து நீதி வழங்­கு­வ­தற்கும் அர­சாங்கம் அக்­கறை கொள்­ளவே இல்லை. சக பிர­ஜை­க­ளான, ஒரு சக இனக் குழு­மத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாசார ஒழிப்பு சார்ந்த இன அழிப்பு நடவடிக்கை குறித்து எந்தவிதத்திலும் அரசும் பேரின அரசியல்வாதிகளும் அலட்டிக் கொள்ளவே இல்லை. 

மாறாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏனைய பேரின அரசியல்வாதிகள் யாழ். நகர வன்முறைகளின் மூலம் அடங்கி இருந்தால் இந்த நாட்டில் வாழலாம். இல்லையேல் தமிழ் நாட்டுக்கு தப்பியோடிச் செல்லுங்கள் என்ற மறைமுகமான செய்தியையே மறை முகமாகப் பிரதிபலித்திருந்தார்கள்.  

யாழ். நூலகம் எரிக்கப்பட்டதை அறிந்ததும், அந்த நூலகத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல் லூரியின் முன்னாள் அதிபர் அருட்தந்தை தாவீது அடிகளார் மாரடைப்பினால் உயிர் துறந்தார். தமிழ் மக்கள் தமது அறிவுக் கரு மூலம் அழிந்துபோனதே என்று மனம் கலங்கி துயருற்றார்கள். யாழ்.நூலகத்தில் சேகரிக் கப்பட்டிருந்த பெறுவதற்கரிய நூல்களும் ஆவணங்களும் அரச பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்டு விட்டனவே என்று துறை சார்ந்தவர்களும், புத்திஜீவிகளும் கல்வி மான்களும் பெரும் கவலை கொண்டார்கள். 

அழிக்கப்பட்ட யாழ்.நூலகத்தைப் பல வருடங்களின் பின்னர், புதிதாக நிர்மாணம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற் கொள் ளப்பட்ட முயற்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, நடைபெற்ற இன அழிப் புக்கு நீதி வேண்டும் என்றே யாழ். மக்கள் கோரினார்கள். 

இருப்பினும் இறுதியாக பல வருடங்க ளின் பின்னர் யாழ். நூலகம் புதிதாக நிர்மா ணிக்கப்பட்டு பெறுமதியான புத்தகங்க ளுடன் மீண்டும் செயற்படத் தொடங்கியுள் ளது. வெண்ணிற அழகிய அலங்காரமான கட்டிடமாக, அது திகழ்கின்றது. அது யாழ்.நகரின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கின்றது. 

இருந்தபோதிலும், அந்த நேர்த்தியான தோற்றத்தின் பின்னால் கோரமான இன அழிப்பின் துயரம், மறைந்து கிடக்கின்றது. அதன் பாரம்பரிய பெருமைக்கும், அறிவு பொக்கிஷமாகிய அதன் கடந்த கால உன் னதத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதியும் அந்த அழகில் இழையோடிக் கிடக்கின்றது. அந்த அநீதிக்கு  நியாயம் வழங்கப்படவில் லையே என்ற ஏக்க உணர்வும் அந்த அழ கில் விரவியிருக்கின்றது. இதனை உணர்வு பூர்வமாக உணர்பவர்கள் எத்தனை பேர் என் பது கேள்விக்குறியாகவே உள்ளது.

- மாணிக்கவாசகம் -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04