ஐ.எஸ். தீவிரவாதிகள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தம்மால் பிடிக்கப்பட்ட இருவருக்கு சிலுவையில் அறைந்த பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
சிரிய ரக்கா நகரில் படமாக்கப்பட்டு' உளவாளிகளை அறுவடை செய்தல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வில்லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெயரிலான ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதியொருவர், செம்மஞ்சள் ஆடை அணிந்த நிலையில் காணப்பட்ட குறிப்பிட்ட இரு உளவாளிகளுக்கும் அருகில் நின்றவாறு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் குறித்து அறிக்கையொன்றை வாசிப்பதையும் தொடர்ந்து அந்த இருவரும் சிலுவைக் கட்டமைப்புகளில் கட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் இருவரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதையும் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட பிந்திய புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
கண்கள் கட்டப்பட்டிருந்த அந்த உளவாளிகளின் ஆடையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் எதிரிகளுக்காக அவர்களை உளவு பார்க்கும் ஏனையவர்களுக்கும் இதே கதியே நேரிடும் என எச்சரிக்கும் அரேபிய மொழியிலான குறிப்பு குத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM