வர­லாற்றுத் தவ­றினை தமிழ் மக்கள் இனியும் செய்­யக்­கூ­டாது: விஜ­ய­கலா மகேஸ்­வரன்

Published By: J.G.Stephan

03 Jun, 2019 | 01:27 PM
image

(தி.சோபிதன்)

வடக்கு கிழக்கு தமி­ழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் சரி­யான தீர்­மானம் எடுத்­தி­ருந்தால் எமக்கு இவ்­வ­ளவு இழப்­புக்கள் வந்­தி­ருக்­காது. எனவே இனி­யா­வது தமி­ழர்கள் தங்­க­ளுக்கு பொருத்­த­மான தேசியத் தலை­வரை எதிர்­வரும் தேர்தல் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் யாழ்.மாநகர சபை மைதானத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று நடை­பெற்ற சமுர்த்தி நிவா­ரண உரித்து பத்­திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இந்த நாட்டில் உள்­நாட்டு போரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வாத தாக்­குதல் வரை தமிழ் மக்­களே கொல்­லப்­பட்டு வரு­கின்­றனர். இலங்­கையில் எத்­த­னையோ சமூகம் வாழ்­கின்ற போதிலும் இன்­று­வரை தமி­ழர்­களே பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.நாட்டில் இடம்­பெற்ற போரினால் தமி­ழர்கள் உட­மை­களை இழந்­தனர். அதற்கு மேலாக பல உற­வு­களை இழந்­து­ள்­ளனர்.

தமி­ழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்­தலின் போது சில நிர்ப்­பந்­தத்­தினால் வாக்­க­ளிக்­காது விட்­டனர்.இதனால் ஐக்­கிய தேசியக் கட்சி பின்­ன­டைவை சந்­தித்­தது.இதனால் நாட்டில் உள்­நாட்டு போர்  உக்­கிரம் அடைந்­தது. முள்­ளி­வாய்க்கால் இறுதி போரில் ஏரா­ள­மான மக்கள் கொல்­லப்­பட்­டனர். இதேவர­லாற்று தவ­றினை இனியும் தமிழ் மக்கள் செய்யக் கூடாது. எனவே இனி வரும் தேர்தலில் சரியான தெரிவினை மேற்கொண்டு முழுநாட்டுக்குமான தேசிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண் டும் என்றார்.--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21