தேசிய இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் தீர்க்கமான வகிபாகம்

Published By: Digital Desk 3

01 Jun, 2019 | 02:51 PM
image

இந்­தியா தும்­மினால் இலங்­கைக்கு காய்ச்சல் வரும் என்று கூறப்­ப­டு­வ­துண்டு. அந்­த­ள­வுக்கு இந்­தி­யாவில் இடம்­பெறும்  நகர்­வு­களின் தாக்கம் இலங்­கையில் பிர­தி­ ப­லிக்கும். அதன்­படி   உலகின் மிகப்­பெ­ரிய  ஜன­நா­யகத் திரு­விழா என வர்­ணிக்­கப்­படும் இந்­தி­யாவின் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்று முடிந்த நிலையில்   மீண்டும் மத்­தியில் பார­தீய ஜனதாக் கட்சி  ஆட்­சிக்கு வந்­துள்­ள­துடன் இரண்­டா­வது தட­வை­யா­கவும் நரேந்­திர  மோடி  பாரதப் பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுக் ­கொண்­டுள்ளார். 

பார­தத்தில் பார­தீய ஜனதாக் கட்சி மீண்டும்  ஆட்­சியில் அமரும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யி­லேயே  353  ஆச­னங்­களைப் பெற்று நரேந்­திர மோடி வெற்­றி­ பெற்­றுள்­ள­துடன் தனிப்­பெ­ரும்­பான்மைப் பலத்­துடன் ஆட்­சி­ய­மைத்­துள்ளார். தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வல்­ல­ர­சாக பார்க்­கப்­படும் இந்­தி­யாவின்  அர­சியல் நகர்­வுகள்,  அதன்  பூகோள அர­சியல்  செயற்­பா­டுகள் சுற்­றி­யுள்ள  தெற்­கா­சிய நாடு­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது மீண்டும் அமோக பெரும்­பான்மைப் பலத்­துடன்  ஆட்­சிக்கு வந்­துள்ள  இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி முன் பல பொறுப்­பு­களும் சவால்­களும் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன என்­பதே உண்­மை­யாகும்.  குறிப்­பாக இலங்­கையில் நீண்­ட ­கா­ல­மாக நிலவும்  தமிழர் தேசியப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு ஒன்றை பெற்­றுக்­கொ­டுப்­பதில் இந்­தி­யா­வுக்கு  மிகப்­பெ­ரிய வகி­பா­கமும்  பாரிய  தார்மீக் கட­மையும் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தை யாரும் மறுக்க முடி­யாது. 

கடந்த காலம் முழு­வதும் இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற  13ஆவது திருத்தச் சட்­டமும் இந்­தி­யாவின்  தலை­யீட்­டினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகும். எனவே  இந்­தி­யாவின் வகி­பாகம் மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகும். 

வர­லாறு முழு­வ­துமே இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் பாரிய  வலு­வான  சமூக, பொரு­ளா­தார, கலா­சார, அர­சியல் தொடர்­புகள் இருந்து வந்­துள்­ளன. விஜ­ய­ன் 700  தோழர்­க­ளுடன் வந்­த­தி­லி­ருந்து இந்தத் தொடர்­புகள்  மேலும் வலு­வ­டைந்­தி­ருக்­கின்­றன. இலங்கை மீது வர­லாற்றில் பல படை­யெ­டுப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. அதில் இந்­தி­யா­வி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட படை­யெ­டுப்­பு­களே அதி­க­மா­ன­தா­க­வுள்­ளன. 

அது­மட்­டு­மன்றி இலங்­கையும் இந்­தி­யாவும்  புவி­யியல் ரீதியாக  ஓர் அல­காக இருந்­த­மைக்­கான விஞ்­ஞானபூர்­வ­மான சான்­று­களும்  காணப்­ப­டு­கின்­றன.  பௌத்த மதமும் இலங்­கைக்கு இந்­தி­யா­வி­லி­ருந்தே வந்­தது. அக்­கா­லத்­தி­லி­ருந்தே வலு­வான பொரு­ளா­தாரத்  தொடர்­புகள் இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் இருந்­துள்­ளன. கால­னித்துவ ஆட்­சி­யிலும் இலங்­கையும் இந்­தி­யாவும் ஓர் அல­கா­கவே   நிர்­வ­கிக்­கப்­பட்­டன. அதன் பின்னர் 1823ஆம்  ஆண்­டி­லி­ருந்து  தென்­னிந்­தியத் தமி­ழர்கள்  இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர். அவ்­வாறு இலங்­கைக்கும்  இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான   சமூக, பொரு­ளா­தார, கலா­சார மற்றும் அர­சியல்  தொடர்­புகள்  வலு­வா­ன­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. 

கால­னித்­துவ ஆட்­சியி­லி­ருந்து சுதந்­திரம் பெற்­ற­திலும்  இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான  தொடர்­புகள்  வலு­வா­ன­வை­யாகும்.  ஆங்­கி­லே­ய­ரிடம் இருந்து  சுதந்­திரம் பெறு­வ­தற்­காக இந்­தி­யாவில் மிகப்­பெரும்  சுதந்­திரப் போராட்­ட­ங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்­த­ள­வுக்கு இலங்­கையில் நிலைமை இருக்­க­வில்லை. இந்­நி­லையில் இந்­தி­யா­வுக்கு சுதந்­திரம் கிடைத்­த­போது இலங்­கைக்கும் கிடைத்­தது. 

இதே­வேளை  இலங்­கையின் தேசிய பிரச்­சினை விட­ய­த்தில் இந்­தி­யாவின்  தீர்க்­க­மான  தலை­யீடு இருந்து வந்­துள்­ளது. இலங்­கைக்கு  சுதந்­திரம் கிடைத்த­ தி­லி­ருந்தே நாட்டின்  தமிழ் பேசும் மக் கள் தமக்­கான அர­சியல் அபி­லா­ஷை­களைப்  பூர்த்தி செய்­வ­தற்­கான    அர­சி யல் தீர்வுத் திட்டம் ஒன்றைக் கோரி ­வ­ரு­கின்­றனர். கடந்த 70 வருட கால­மாக இந்தக் கோரிக்கை இருந்­து­வ­ரு­கின்­றது.  இதில் அவ்­வப்­போது இந்­தி­யாவின்  தலை­யீடு இருந்­து­ வந்­துள்­ளது.  1980 களில் இலங்கை மேற்­கு­லகின் பக்கம்  சாய்­வ­தாக உணர்ந்த இந்­தியா வடக்கு, கிழக்கில்  தமிழ் குழுக்­க­ளுக்கு  உத­வி­ய­தாக  வர­லாறு  உள்­ளது.  எப்­ப­டியும் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தரத் தீர்­வைக் ­கா­ண ­வேண்டும் என்ற  வகையில் இந்­தியா  பல முயற்­சி­களை   எடுத்­துள்­ளது என்­பதே உண்­மை­யாகும். 1987ஆம் ஆண்டு  இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் ஒரு திருப்­பு­மு­னை­யாக இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­துடன்  அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வரப்­பட்­டது. அத­னூ­டாக  மாகாண சபை முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் மாகாண சபை முறைமை இலங்­கைத்  தமிழ் பேசும் மக்­களின்  அர­சியல் அபி­லா­ஷை­களைப்  பூர்த்தி செய்­ய­வில்லை.  இதற்­கி­டையில்  இந்­திய  முன்னாள்  பிர­தமர் ராஜீவ் காந்தி கொல்­லப்­பட்ட விட­யமும் இரண்டு நாடு­களின் உறவில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இது­வரை  அந்த மக்­க­ளுக்கு முழு­மை­யான  ஒரு தீர்வு கிடைக்­காத நிலை­மையே நீடித்­து ­வ­ரு­கின்­றது. 

இதற்­கி­டையில் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான நட்­பு­றவில் விரி­சல்­களும்  ஏற்­பட்டு மறைந்­துள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும்  இலங்கை பொரு­ளா­தார ரீதியில் தனது முத­லா­வது  சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை இந்­தி­யா­வு­ட­னேயே  செய்­து­ கொண்­டது. அதன் பின்னர் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான  வர்த்­தகத்  தொடர்­புகள் வலு­வ­டைந்­தன. 

மேலும் யுத்தம் 2009ஆம் ஆண்டு  முடி­வுக்கு வந்­த­போது அதற்கு இந்­தியா  இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தாகத்  தெரி­விக்­கப்­பட்­டது. அப்­போது யுத்­தத்தை முடிக்க உத­விய இந்­தியா  அதன் பின்னர்  அர­சியல் தீர்வுத் திட்டம்  ஒன்றை அடைய  காத்­தி­ர­மான பங்­க­ளிப்பைச் செய்யும் என்று  எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் யுத்தம்  முடிந்த பின்னர் கடந்­து­போன கடந்த 10 வரு­டங்கள்  அர­சியல் தீர்வு விட­யத்தில் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன. இக்­கா­லப்­ப­கு­தியில் இலங்கை அரச பிர­தி­நி­தி­க­ளு­டனும்  தமிழ்த் தலை­வர்­க­ளு­டனும்   பல பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­போ­திலும்    ஒரு  நிரந்­தரத்  தீர்­வைக் ­காண்­ப­தற்­கான   இணக்­கப்­பா­டு கள் எட்­டப்­ப­ட­வில்லை. 

மோடி அர­சாங்­கத்தின் கடந்த ஐந்­து­ வ­ருட காலப்­ப­கு­தி­யிலும்    இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் மற்றும் தமிழ்  மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன்  பல பேச்­சு­வார்த்­தை­களை இந்­திய  அர­சாங்கம் நடத்­தி­யது. எனினும்  இது­வரை  ஆக்­க­பூர்­வ­மான  எந்த விட­யமும்  தீர்வு விட­யத்தில் நடை­பெ­ற­வில்லை. 

இந்த நிலை­யி­லேயே பிராந்­தி­யத்தின் வல்­ல­ர­சாகக் கரு­தப்­படும்  இந்­தியாவில் மீண்டும்  பிர­தமர் நரேந்­திர மோடி  தலை­மை­யி­லான  அர­சாங்கம்   ஆட்­சிக்கு வந்­ துள்­ளது. அதா­வது சர்­வ­தேசப் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யுள்ள நிலையில், அதன் கசப்­பான அனு­பவம் இலங்­கையைப்  பாதித்­துள்ள நிலையில் தெற்­கா­சிய பிராந்­தி­யத்தின் வல்­ல­ரசு என பார்க்­கப்­படும் இந்­தி­யாவில் தனிப்­பெ­ரும்­பான்மைப் பலத்­துடன் மோடியின்  அர­சாங்கம்  ஆட்­சிக்கு வந்­துள்­ளது. 

இந்தப் பின்­ன­ணியில் இனி தமிழர் பிரச்­சினை தீர்வு விட­யத்­திலும்   மலை­யக மக்­களின் சமூக முன்­னேற்ற விட­யத்­திலும் இந்­தியா  என்ன செய்­யப்­போ­கின்­றது? எவ்­வா­றான அணு­கு­மு­றை­களை  எடுக்­கப்­போ­கின்­றது என்­பதே  தற்­போது அனைவர் மத்­தி­யிலும் காணப்­ப­டு­கின்ற கேள்­வி­யாகும்.  குறிப்­பாக   இலங்­கையின் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைக்கு  ஒரு நியா­ய­மான,  நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வைக் ­காண்­ப­தற்கு இந்­தியா எவ்­வா­றான பங்­க­ளிப்பை வழங்­கப்­போ­கின்­றது?  எவ்­வா­றான வகி­பா­கத்தை  வகிக்­கப்­போ­கின்­றது என்­பவை  தொடர்பில்  அனை­வரும் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.  மலை­யக மக்­களின் சமூக மேம்­பாட்டு விட­யத்­திலும் இந்­தியா உத­வ ­வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு  மக்கள் மத்­தியில் உள்­ளது. 

இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் மீது  தமிழ் பேசும் மக்கள் பாரிய  நம்­பிக்­கையை வைத்­துள்­ள னர். இந்­தியா இந்த விட­யத்தில் தலை­யிட்டு தமக்­கான நியா­ய­மான தீர்வை பெற்­றுத்­தரும் என்று  தமிழ் மக்கள் நம்­பிக் ­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால்  ராஜீவ் காந்­தியின் கொலைச் ­சம்­ப­வத்­தின் பின்னர்  இந்­தியா இலங்கை விட­யத்தில்   நேர­டி­யாக  தீர்வு விட­ய­த்தில்  தலை­யி­டு­வதைத் தவிர்க்­கின்­றது. இலங்கை  அர­சாங்­கமும்  இந்­தியா  எமது   உள்­நாட்டு விட­யங்­களில் நேரடித் தலை­யீட்டை செய்ய முடி­யாது என்­பதை  வெளிப்­ப­டுத்தி­ வ­ரு­கின்­றது. ஆனால்   தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் ஆக்­க­பூர்­வ­மான வகி­பாகம் ஒன்று உள்­ளது என்­ப­தை   இலங்கை  அர­ சி­யல்­வா­திகள் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். அதனை யாரும் முழு­மை­யாக மறுத்­து­ வி­ட­வில்லை. 

கடந்த ஐந்­து­ வ­ருட காலத்தில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இரண்டு தட­வைகள் இலங்­கைக்கு வந்துள்ளார். இதன்­போது  தமிழ்க் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.  அரச தப்­பு­டனும் பேச்சு நடத்­தினார். ஆனால்  இக்­கா­லப் ­ப­கு­தியில் அர­சியல் தீர்வு  விட­யத்தில் எவ்­வி­த­மான முன்­னேற்­றங்­களும்  இடம்­பெ­ற­வில்லை. 

இந்தச் சூழலில்  இந்­தியா  எதிர்­வரும் ஐந்­து ­வ­ருட காலப்­ப­கு­தியில்  இலங்­கையின்  இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத் தில் என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பது குறித்து  தமிழ் மக்கள் எதிர்­பார்ப்­புடன் உள்­ளனர். 2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடி­வுக்குக் கொண்டுவர இந்­தியா உதவி வழங்­கி­யது.  இதனை முன்­னைய அர­சாங்­கமே பல தட­வைகள் கூறி­யி­ருக்­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இந்­தியா  இலங்­கையின்  தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான, நிரந்­த­ர­மான தீர்­வைக்­காண  முழு­மை­யான பங்­க­ளிப்பைச் செய்ய முன்­வ­ர­ வேண்டும். 

இந்த விட­யத்தில் தமிழ் பேசும் மக்கள்  பாரிய எதிர்­பார்ப்­புடன் இருக்­கின்­றனர் என்­ப­தை மறந்­து­வி­டக்­ கூ­டாது. மோடி வெற்­றி­பெற்­றதும்  வாழ்த்துத் தெரி­வித்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் முக்­கிய விட­யங்­களைக் குறிப்­பிட்­டி­ருந்தார். அதா­வது நரேந்­திர மோடி­யுடன் மிகவும் நெருக்­க­மாகச் செய­லாற்றி, தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண, ஆவ­லாக இருக்­கின்றோம். எதிர்­வரும் ஆண்­டு­களில் தங்­க­ளது தலை­மைத்­து­வத்தின் கீழ் பல மைல் கற்­களை நீங்­களும் இந்­திய மக்­களும் அடைய நாம் பிரார்த்­தனை செய்­கிறோம். இத்­த­ரு­ணத்தில் இலங்கை மக்­க­ளுக்கு, குறிப்­பாக தமிழ் பேசும் மக்­க­ளுக்கு, தங்­க­ளது அரசும் இந்­தி­யாவும் நல்­கிய அனைத்து உத­வி­க­ளுக்கும் எமது மன­மார்ந்த நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்ள விரும்­பு­கிறேன். தொடர்ந்தும் வருங்­கா­லங்­களில், இலங்­கையின் தேசியப் பிரச்­சி­னைக்கு நிறை­வான, நீதி மற்றும் சமத்­து­வத்தின் அடிப்­ப­டை­யி­லான, ஒரு நிரந்­தரத் தீர்வை எட்டும் முக­மா­கவும், தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் சமா­தான முன்­னேற்­றத்­தையும் உறு­தித்­தன்­மை­யையும் நிலை­நாட்டும் முக­மா­கவும் மிக ­நெ­ருங்கிச் செய­லாற்ற ஆவ­லாக உள்ளோம். மீண்­டு­மொ­ரு ­முறை தமிழ் பேசும் மக்­களின் சார்பில், உய­ரிய பத­வியில் நீங்கள் திறம்­பட செய­லாற்ற எனது மன­மார்ந்த வாழ்த்­து­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்  என்று       சம்­பந்தன்   அதில்  தெரி­வித்­தி­ருந்தார். இதன்­படி  இலங்­கையின்  தமிழ் பேசும்  மக்­களின் தேசிய  இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இந்­தியா எவ்­வா­றான பங்­க­ளிப்பை வழங்­க­ வேண்டும் என்­பதில்    தமிழ் மக்கள் எத்தகைய எதிர்­பார்ப்பில் உள்­ளனர் என்­ப­தை  உணர முடி­கின்­றது. அதனை இந்­தியா உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். 

மிக நீண்­ட ­கா­ல­மாக தமிழ் பேசும் மக்கள்  தீர்­வுக்­கான  முயற்­சி­களை முன்­னெ­டுத்­தனர்.  ஆனால்  இது­வரை  அந்த முயற்சி வெற்­றி­ பெ­ற­வில்லை.  இந்­தி­யாவின் தலை­யீட்டில் ஒரு கட்­டத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்வும் இன்று  முழு­மை­ய­டை­ய­வில்லை. எனவே  இந்த விட­யத்தில் இந்­தியா தனது வகி­பா­கத்தை உணர்ந்து செயற்­படும் என்று  மக்கள் நம்­பு­கின்­றனர். இது சவா­லான விடயமாகும்.   இந்த விடயத்தில் நரேந்திர மோடி பல சவால்களையும் சமாளித்துச் செயற்பட வேண்டியிருக்கின்றது. 

அதேபோன்று  மலையக மக்களும்   இந்தியா  தமது சமூக மேம்பாட்டுக்கு உதவும் என  எதிர்பார்க்கின்றனர். வீட மைப்பு விடயத்தில் இந்தியா  ஏற்கனவே   உதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால்  மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் இந்தியா  உதவ வேண்டிய  தேவை காணப்படுகின்றது. 

இது தொடர்பில்  பேராசிரியர் ஒருவர்  எம்முடன் கருத்துப் பகிர்கையில், 

இலங்கையிலுள்ள மலையக சமூகத் துக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் 4000 மாணவர்கள் அளவில் உயர் கல்வி கற்பதற்கு தகுதி பெறாமல்    தொழில்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு இந்தியாவில் தொழிற்பயிற்சி வழங்க முடியும் என்றால் அது பாரிய  விடயமாக அமையும். குறிப்பாக  தொழில்நுட்பக் கல்வியில் பாரிய  ஒத்துழைப்பை வழங்க முடியும்  என்று குறிப்பிட்டார். 

அந்தவகையில் இலங்கை விடயத் தில் இந்தியாவின் பங்களிப்பு மிக வும் முக்கியத்துவமிக்கதாகவே அமைந்துள்ளது. அந்தப்  பங்களிப்பு அல்லது வகிபாகம் உரிய முறையில்   அமைய வேண்டும்.   தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியமைக்கும்  மோடியின் அரசாங்கத்தின் மீது இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பாரிய  எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கின்றனர் என்பதே யதார்த்தமாகும். அதனைப்  புரிந்து பிராந்திய வல்லரசு செயற்படுமா?  பார்க்கலாம். 

ரொபட் அன்­டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்