காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில், பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டில்லியிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர். இதில், பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம அவர் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM