(எம்.ஆர்.எம்.வஸீம்)
ரிஷாத் பதியுதீனை சட்டத்துக்கு முன்நிறுத்தினால் அவருடன் இருக்கும் ஐந்துபேரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். அதனால் ஆட்சி தொடர்பில் சிந்திக்காமல் பிரதமர் ரிஷாத்தை விசாரணைக்குட்படுத்தவேண்டும். அத்துடன் அவருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தற்போது ஒப்புவிக்கப்பட்டு வருகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுடன் அமைச்சர் ரிஷாத் தொடர்புகளை பேணிவந்திருப்பதுடன் அவர்களுக்கு உதவிகளையும் செய்து வந்திருக்கின்றார். இதுதொடர்பான பல விடயங்கள் தற்போது வெளிப்பட்டுள்ளதுடன் அவை ஒப்புவிக்கப்பட்டும் வருகின்றன. அதனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தால் அவரும் அவருடன் இருக்கும் 5 உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற அச்சத்திலே தெரிவுக்குழு அமைத்து அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் ரிஷாத் பதியுதீனை விசாரணைக்கு உட்படுத்தினால் அவருடன் இருக்கும் 5 பேரில் 4 பேர் அவரைவிட்டு விலகி தனித்து கட்சியை கொண்டுசெல்லவே முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது. அதனால் பிரதமர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
ரிஷாத் பதியுதீன் தற்கொலை குண்டுதாரிகளுடன் வியாபார ரீதியில் கொடுக்கல்வாங்கல்களை வைத்துக்கொண்டுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு இங்கு அடிப்படைவாதிகளுக்கு தேவையான பள்ளிவாசல்களை அமைத்துள்ளார்.
அவற்றில் பாரியளவில் நிதி மோசடிகளையும் செய்திருக்கின்றார். இதுதொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய இருக்கின்றோம். அதேபோன்று அவரின் அமைச்சுக்கு கீழ் இருக்கும் ச.தொ.ச நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்கள் நாட்டில் அடிப்படைவாதிகள் தங்கி இருந்த இடங்களுக்கு வந்துபோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குருணாகல் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியருக்கு எதிராக தாய்மார்கள் முறைப்பாடு செய்துவருகின்றனர். குறித்த வைத்தியர் அமைச்சர் ரிஷாத்துடன் தொடர்புடையவர். அதனால் அடிப்படைவாதிகளின் நோக்கமாக இருந்தது, இந்த நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களை இல்லாமலாக்குவதாகும். அந்தவகையில் வைத்தியர் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கலாம்.
அதேபோன்று ரிஷாத் பதியுதீனுக்கு தொலைக்காட்சி சேவை ஒன்றும் இருக்கின்றது. அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஒரு மாதத்துக்கு பல இலட்சம் ரூபாவுக்கு விளம்பரங்களை வழங்குமாறு ச.தொ.ச உட்பட அவரின் அமைச்சுக்கு கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கு வற்புறுத்தி இருக்கின்றார். அதனால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவருக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து உண்மை நிலையை கண்டறியவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM