கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் 9 தற்கொலைதாரிகள் மேற்கொண்ட 1800 தொலைபேசி அழைப்புக்கள் குறித்து தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 66 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 21 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 23 மடிக்கணினிகள், 3 கணினிகள், 138 கையடக்கத் தொலைபேசிகள், 30 வன் தட்டுக்கள், 12 பென்டிரைவ்கள், 142 சிம் அட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM