'தேசிய பாதுகாப்புச்சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடாதது பெரும் தவறு' 

Published By: Vishnu

30 May, 2019 | 04:09 PM
image

(நா.தனுஜா)

தேசிய பாதுகாப்புச்சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடவில்லை என்பது பெரும் தவறாகும். அதற்குப் பொறுப்பான தலைவரும்  இதுகுறித்து வெகுவாக ஆர்வம் காட்டவில்லை. அனைத்தும் மிகச் சுலபமாகக் கிடைத்துவிட்டமையே இதற்குப் பிரதான காரணம் ஆகும். அதேபோன்று இத்தகைய சூழ்நிலைகள் பற்றிய போதிய தெளிவின்மையும் காரணமாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேசிய பாதுகாப்புச் சபை சுமார் இரண்டு மாதங்களாகக் கூடவில்லை என்பது நகைப்பிற்குரியதாக இருக்கின்றது. நான் ஜனாதிபதி இருந்த காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை தேசிய பாதுகாப்புச்சபை கூடுவது வழக்கமாகக் காணப்பட்டது. அதனாலேயே யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரவும் முடிந்தது. அக்கூட்டத்தில் யுத்தத்தின் அவ்வப்போதைய நிலை தொடர்பில் புலனாய்வுப்பிரிவினர் தகவல்களை வழங்கினார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரும் எனது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெற்றது.

இவ்வாறு இரண்டு மாதங்கள் வரையில் பாதுகாப்புச்சபை கூடவில்லை என்பது பெரும் தவறாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47