தீர்ப்பு அறி­விக்க நீதி­ப­திக்கு விருப்­ப­மில்லாததால் மனு மீண்டும் விசாரணைக்கு

Published By: R. Kalaichelvan

29 May, 2019 | 11:45 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து சர­ணா­ல­யத்தின் காட்டுப் பகு­தியில் உள்­ள­தாக கூறப்­படும் சட்டவிரோத குடி­யி­ருப்­புக்­களை அகற்ற உத்தரவிடுமாறு கோரி தாக்கல்  செய்­யப்­பட்ட மனுவின் தீர்ப்பை அறி­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி மஹிந்த சமரவர்தன விருப்­ப­மின்­மையை வெளி­யிட்­டதால் அந்த மனுவை மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த இந்த ரீட் மனு,மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதிபதி மஹிந்த சம­ர­வர்­தன முன்­னி­லையில் விசா­ரிக்­கப்­பட்ட நிலையில் எதிர்­வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி தீர்ப்பறிவிக்கப்படவிருந்­தது.

இந்நிலையில் அந்த தீர்ப்பை அறி­விக்க குறித்த நீதி­பதி விருப்பமின்­மையை வெளி­யிட்­டதால், அந்த மனுவை மீள ஆரம்பத்திலிருந்து விசாரிக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை  நீதி­பதி முடிவு செய்­துள்ளார். 

அதன்­படி அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் உள்­ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குறித்த வழக்கை எதிர்­வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல், ஆரம்பத்தி­லி­ருந்து மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாக  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று அறிவித்­தது.

வில்­பத்து வனத்தை அண்­மித்த பகு­தி­க­ளி­லுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம் மக்­களை குடி­ய­மர்த்­து­வ­தற்­காக சட்­ட­வி­ரோ­த­மாக காணிகளை வழங்­கு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள முயற்­சியை தடுத்­து­நி­றுத்­து­மாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான ஜனக்த சில்வா மற்றும் நிஷங்க பந்­துல கரு­ணா­ரத்ன ஆகியோர் முன்­னி­லையில் நேற்று இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே மீள விசா­ர­ணைக்­காக குறித்த வழக்கு எடுக்­கப்­ப­டு­வது குறித்து அறிவிக்கப்பட்­டது. 

2015 இல் தாக்கல் செய்­யப்­பட்ட இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், வன­வளத் திணைக்­களப் பணிப்­பாளர் நாயகம், வன பாது­காப்பு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் உள்­ளிட்­ட­வர்கள் இந்த வழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்­ளனர். 

இந்த வழக்கின் விசா­ர­ணைகள் அனைத்தும் கடந்த வருடம் நிறைவு செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது மீள விசாரணைகள் இடம்பெறவுள்ளன. 

தீர்ப்பு வழங்க திகதி குறிப்பிடுவதற்கு முன்னர் ஏற்கனவே  4 தடவைகள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமரவர்தன வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02