நான் அமைச்சரவையில் இருப்பதா இல்லையா என்பதை அனுரகுமார தீர்மானிக்க முடியாது : விஜயதாச

19 Nov, 2015 | 11:04 AM
image

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வதைப் போன்று முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால் சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.


எவன்ட் கார்ட் விவ­கா­ரத்தில் திலக் மாரப்­பன அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தது மட்­டும்­போ­தாது. மாறாக அமைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷவும் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டும் என்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்­ளமை குறித்து வின­வி­ய­போதே அமைச்சர் விஜே­தாச மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.


அமைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,


நான் அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க தீர்­மா­னிக்க முடி­யாது. மாறாக நான் அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுமே தீர்­மா­னிக்­க­வேண்டும்.


அந்­த­வ­கையில் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய முடி­யாது. மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வ­தைப்­போன்று நாங்கள் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால் சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது.


எமது அர­சாங்கம் அனைத்து விட­யங்­க­ளையும் சட்­டத்­துக்கு உட்­பட்டே முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. நானும் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமை­யவே வேலைத்­தி­ட­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றேன். அவ்­வா­றான நிலையில் யாரோ ஒருவர் கூறு­கின்றார் என்­ப­தற்­காக அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து விலக முடி­யாது.


மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் ஒரு காலத்தில் 60 ஆயிரம் பேரின் உயிர்­க­ளுடன் விளை­யா­டி­யதை மறந்­து­விட்­டனர் போல் தெரி­கின்­றது. அவர்கள் செய்­த­போது ஒன்­று­மில்லை. தற்­போது பெரி­தாக குரல் கொடுக்­கின்­றனர்.


மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வ­தைப்­போன்று முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரை சட்­டத்­துக்கு முர­ணாக கைது செய்­தி­ருந்தால் இன்று அவர்கள் ஒரு பிரச்­சி­னை­யையும் எழுப்­பி­யி­ருக்­க­மாட்­டார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு சட்டத்தை மதிக்காது எதனையும் செய்ய முடியாது என்றார்.


எவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சையில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாரம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02