முல்லைத்தீவு புத்துவெட்டுவான் கிராமத்தில் நேற்றிரவு புகுந்த காட்டுயானைகளால் பெருந்தொகையான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான் பழைய முறிகண்டி ஆகிய கிராமங்களில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் இந்த பகுதிகளில் வாழும் மக்கள் தமது வாழ்வாதார பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியாத நிலை தோன்றியுள்ளது.
அத்துடன் இந்த கிராமங்களில் வாழும் மக்களில் கணிசமானவர்கள் காட்டுயானை அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதேவேளை குறித்த கிராமங்களில் வாழும் மக்கள் அன்றாடம் காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு புத்துவெட்டுவான் கிராமத்தில் புகுந்த காட்டுயானைகள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த போது அழிவடைந்து மீண்டும் நடுகை செய்யப்பட்ட பெருமளவான தென்னைகளை அழித்துள்ளன. இவ்வாறு பெருந்தொகையான பயிர்செய்கைகளை யானைகள் அழித்து வருவதனால் தமது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM